Breaking News

யாழ். மாவட்டத்தில் 4,500 ஏக்கர் காணிகள் இராணுவத்தின் கையில்..!

யாழ்.மாவட்டத்தில், பொதுமக்களுக்கு சொந்தமான காணிகளில், இன்னும் 4,500 ஏக்கர் காணிகள், இராணுவத்தின் பாவனையில் உள்ளதாகவும், எதிர் வரும் ஆண்டுகளில் இக் காணிகள் விடுவிக்கப்படலாம் என யாழ். மாவட்ட மேலதிக காணி அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தெரிவித்துள் ளார். 

பாராளுமன்ற நிதிக்குழுவின் கூட்டம், யாழ். மாவட்ட செயலகத்தில், அக் குழு வின் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான கலந்து ரையாடலில் கலந்து கொண்டிருந்த சுப்பிரமணியம் முரளிதரன், மீள்குடியேற் றம், நிதி ஒதுக்கீடு மற்றும் உட்கட்டமைப்பு உள்ளிட்டவை பற்றி தெரிவிக்கை யில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளாா்.