மீட்கப்படும் மனித எலும்புக் கூடுகளால் மன்னார் மக்கள் அச்சம்.!
மன்னார் சதோச வளாகத்தில் மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிகள் தொடா்வதுடன் மனித எச்சங்களை அப்புறப்படுத்தும் பணிகளின் போதும் தொடர்ச்சியாக புதிய மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டவாறு உள் ளன.
இவ்வாறாக புதிய மனித எச்சங்கள் அடையாளப்படுத்தப்பட்டு வருகின்ற மையினால் அகழ்வு பணிகள் முடி வின்றி தொடர்வதுடன் இன்று 62 வது தடவையாக குறித்த வளாகத்தில் அக ழ்வு பணிகள் நடைபெறுகின்றன.
விசேட சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தொல்லியல்துறை பேராசிரியர் தலைமையில் அகழ்வுப் பணிகள் நடைபெறுகின்ற இந்நிலையில் இதுவரை குறித்த வளாகத்தில் 111 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டதுடன் 97 மனித எச்சங்கள் குறித்த வளாகத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
மேலதிகமாக காணப்படும் 14 மனித எச்சங்களை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெறுகின்ற போதும் குறித்த மனித எச்சங்களின் கீழ் மேலும் அதிகளவி லான மனித மண்டையோடுகள் காணப்படுவதனால் அப்புறப்படுத்தும் பணி களை முழுவதுமாக முடிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஆனாலும் இதுவரை 111 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டாலும் 97 மனித எச்சங்கள் மீட்கப்பட்டாலும் குறித்த வளாகத்தில் இருந்து மீட்கப்பட்ட தடைய பொருட்கள் குறைவாகவே காணப்படுகின்றன.
இது வரை வட்ட வடிவிலான உலோகப் பொருட்கள் மாலை போன்ற ஒரு சில தடைய பொருட்களே மீட்கப்பட்டுள்ளன.
இது வரை 4 தொடக்கம் 5 அடி வரை அகழ்வுகள் நடைபெற்றிருந்தாலும் இதுவரை துணிகளோ அல்லது ஆடைக ளுடன் சம்மந்தப்பட்ட எவ்விதமான தடைய பொருட்களும் கிடைக்கவில்லை என்பது சந்தேகத்திற்கு இடமாகவுள்ளது.
சடலங்களாக புதைக்கப்பட்ட போது ஆடையில் காணப்படும் தடையப் பொரு ட்கள் எவையும் கண்டு பிடிக்கப்படாத நிலையில் புதைக்கப்பட்ட உடல்கள் நிர்வாண நிலையில் புதைக்கப்பட்டிருக்கலாமென மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.