''பிள்ளைகள் இறப்பதற்கு முன் மீட்பதற்கு அனைவரும் ஒத்துழையுங்கள்''
தங்கள் விடுதலைக்காக உணவு அருந்தாமல் போராட்டம் நடாத்திக் கொண்டி ருக்கும் எங்கள் பிள்ளைகள் சாவதற்குள் அவர்களை மீட்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பைத் தாருங்கள்.
அவர்கள் எங்களுக்கு உயிரோடு வேண்டுமென அனுராதபுரம் சிறைச் சாலையில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியான உணவுத் தவிர்ப்பு போராட்டத்தினை நடாத்திவரும் தமிழ் அரசியல் கைதிகளான சுலக்ச னின் சகோதரி கண்ணீர் மல்க கோரி யுள்ளாா்.யாழ்.ஊடக அமையத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அக்கோரிக்கையை விடுத்தனர். இதன்போது அரசியல் கைதியான சுலக்ஷனின் சகோதரி மோகனா தெரிவிக்கையில்,
எனது அண்ணா தற்போது ஐந்தாவது முறையாகவும் உண்ணாவிரதப் போராட் டத்தில் குதித்துள்ளாா். ஒவ்வொரு முறையும் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்கும் போதும் வாக்குறுதிகள் வழங்கப்பட்டு அவை இடை நிறுத்தப் பட்டுள்ளது.
இவ்வாறு ஐந்து முறை கடந்த நிலையிலேயே தற்போது இப்போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்கள். அவர்களது உடல் நிலை மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ளது எனவே அவர்களுக்கு விடுதலை அல்லது குறுகிய கால புனர் வாழ்வளித்து விடுதலை செய்ய வேண்டும்.
அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் இதேவேளை இச் செய்தி யாளர் சந்திப்பில் கலந்துகொண்ட விடுதலை செய்யப்பட்ட அரசியல் கைதி யான கோமகன் தெரிவிக்கையில்,
தமிழ் அரசியல் கைதிகளுடைய வழக்குகளானது தொடர்ச்சியாக இழுத் தடிக் கப்பட்டு வருவதுடன் அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு எதுவித ஆதார ங்களும் இல்லை.
வெறுமனே குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தினை அடிப்படையாக வைத்து வழக்குகளை தாக்குதல் செய்துள்ளார்கள். இக் குற்ற ஒப்புதல் வாக்குமூலமும் அவர்களால் சுயமாக வழங்கப்படவில்லை.
மாறாக பயங்கரவாத தடுப்புப் பிரிவினுடைய வற்புறுத்தலின் அடிப்படையி லேயே அச்சத்தின் காரணமாக வழங்கப்பட்டதாகும். இவ்வாறான நிலையில் எமது வழக்குகளை விசாரணை செய்வதற்காக விசேட நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட்டபோதும் அங்கு தற்போது அரசியல் கைதிகளின் வழக்குகள் விசாரிப்பதற்கு பதிலாக வேறு வழக்குகளே விசாரணை செய்யப்பட்டு வரு வதுடன் மீண்டும் அரசியல் கைதிகளின் வழக்குகள் அநுராதபுரம் மேல் நீதி மன்றுக்கு மாற்றப்பட்டுள்ளது.
எமது வழக்கு விசாரணைகளின் போது சட்டத்தரணிகளும் எம் சார்பாக முன் னிலையாவதில்லை. நீண்ட காலத் தவணைகளும் நீதிமன்றத்தினால் வழங் கப்பட்டு வழக்கு விசாரணைகள் இழுத்தடிப்புச் செய்யப்படுகின்றன.
இந்நிலையிலேயே அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அவ் அரசியல் கைதிகளே கடந்த ஐந்து தடவைகள் உண்ணாவிரதப் போராட்டங் களை முன்னெடுத்திருந்தனர்.
இருந்தபோதிலும் அவ் ஐந்து தடவைகளும் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படாத நிலையில் தற்போது அநுராதபுரம் சிறைச்சா லையில் உள்ள எட்டு தமிழ் அரசியல் கைதிகளும் மீண்டும் உண்ணா விரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்கள்.
இவ்வாறான நிலையில் அவ் அரசியல் கைதிகளின் விடுதலையை முதன் மைப்படுத்தி அதற்கான ஆக்கபூர்வமான தீர்வு ஒன்றைப் பெற்றுக் கொடுப் பதற்கு யாழ்.பல்கலைக்கழக சமூகம் தமிழ் அரசியல் தலைமைகள் மற்றும் பொது அமைப்புக்கள் ஆகியோர் முன்வர வேண்மெனத் தெரிவிக்கப்பட்டுள் ளது.







