முப்படை அலுவலக பிரதானி வெளிநாடு சென்றது எப்படி? சரத் விஜேசூரிய.!
முப்படைகளின் அலுவலக பிரதானி வெளிநாடு சென்றமை தொடர்பில் பாது காப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி பதில் வழங்க வேண்டுமென சமூக நிதிக்கான மக்கள் அமைப்பின் இணை அமைப்பாளர் பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
முப்படைகளின் அலுவலக பிரதானி அத் மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன குற்றப் புல னாய்வு விசாரணைக்கு ஆஜராகா மல் வெளிநாடு சென்றுள்ளமை தொடர்பில் கரு த்துத் தெரிவிக்கையில் இவ்வாறு தெரி வித்துள்ளாா்.
ஐந்து மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று, சட்ட விரோதமாக தடுத்து வைத்து, கப் பம் பெற்றமை மற்றும் காணாமல் ஆக்கியமை தொடர்பில் பிரதான சந்தேக நபரான நேவி சம்பத் எனப்படும் கடற்படை புலனாய்வுப் பிரிவின் முன்னாள் லெப்டினன் கொமாண்டர் ஹெட்டி ஆரச்சி முதியன் சலாகே சந்தன பிரசாத் ஹெட்டி ஆரச்சிக்கு சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி மறைந்திருக்க உத வியமை தொடர்பிலான விசாரணைக்கு
நேற்றைய தினம் வருமாறு முன்னாள் கடற்படை தளபதியும் தற்போதைய முப்படைகளின் அலுவலக பிரதானியுமான அத்மிரால் ரவீந்ர விஜேகுணர த்னவுக்கு குற்றப்புலனாய்வு பிரிவினரால் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. .
என்றாலும் நேற்றைய தினம் அவர் குற்றப்புலனாய்வு விசாரணைக்கு ஆஜரா காமல் வெளிநாடு சென்றுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு விசார ணைக்கு வருமாறு அழைக்கப்பட்டிருந்தபோதும் முப்படைகளின் அலுவலக பிரதானி அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன ஜனாதிபதியின் அனுமதியின்றி வெளிநாட்டுக்கு நகர முடியாது.
அதனால் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் அவரின் வெளிநாட்டு பய ணம் தொடா்பாக ஜனாதிபதி பதிலளிக்க வேண்டுமெனத் தெரிவிக்க வேண் டும்.








