Breaking News

குருந்தூர் மலைக்கு செல்லத் தடை : நீதிமன்றம்.!

முல்லைத்தீவு மாவட்டம் குமுழமுனை தண்ணிமுறிப்பு பகுதியில் அமைந் துள்ள குருந்தூர் மலைக்கு பொது மக்கள், மதம் சார்ந்தவர்கள் எவரும் செல் வதற்கு தற்காலிக தடை விதிப்பை முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் விடுத் துள்ளது. 

கடந்த 04 ஆம் திகதி குருந்தூர் மலைப் பகுதியில் புத்தர் சிலை ஒன்றினை அமைக்கும் நோக்குடன் பிக்குமார் உள்ளிட்ட 12 பேர் சென்றுள்ளார்கள். இதன் போது பிரதேச இளைஞர்கள் மக்கள் இணைந்து இவர்களை தடுத்து நிறுத்தி யுள்ளதுடன்,

ஒட்டுசுட்டான் பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்த பிக்குமார் உள்ளிட்ட 12 பேரையம் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்த போது அவர்கள் குருந்தூர் மலையில் முன்னர் இருந்த விகாரை தொடர்பில் ஆய்வு செய்வ தற்காகச் சென்றுள்ளதாக தெரிவித்து பூகோளவியல் பணிப்பாளர் வழங்கி யுள்ள கடிதத்தை சமர்ப்பித்துள்ளாா்கள். 

குறித்த பிக்குகள் உள்ளிட்ட 12 பேரையும் பொலிசார் விடுவித்துள்ளார்கள். இச் சம்பவம் தொடர்பிலும் குருந்தூர் மலைக்கு பொதுமக்கள் மதம் சார்ந்தவர்கள் எவரும் செல்வதற்கு தடை விதிக்ககோரி பொலிஸார் 05 ஆம் திகதி நீதிமன் றிற்கு மனுத்தாக்கல் செய்துள்ளாா்கள். 

 இச் சம்பவம் தொடர்பிலான விசாரணை நேற்று நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது எதிர்வரும் 13 ஆம் திகதி வரை குறித்த மலைக்கு எவரும் செல்லமுடியாதவாறு தற்காலிக தடை உத்தர வினை நீதிபதி பிறப்பித்துள்ளதுடன்,

விகாரை ஆய்விற்காக பிக்குமார் செல்வதற்கு அனுமதிகொடுத்த பூகோளவி யல் பணிப்பாளரின் கடிதத்தின் உண்மை தன்மையினை உறுதிப்படுத்துமாறு தொல்பொருள் திணைக்களத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலதிகன வழக்கு விசாரணை எதிர்வரும் 13 ஆம் திகதி மேற்கொள்ளப்படு மெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.