பொலிஸாரின் இலஞ்சத்தை எதிர்த்து முதியவர் மரத்தில் ஏறிப் போராட்டம்.!
கிளிநொச்சியில் இன்று முதியவர் ஒருவர் பொலிஸார் இலஞ்சம் பெறுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பிரதம நீதியரசர் மற்றும் நீதி அமைச்சர் ஆகியோர் முன்னிலையில் மரத்தில் ஏறி போராடியுள்ளாா்.
கிளிநொச்சி மாவட்டத்தில் புதிய நீதி மன்றக் கட்டடத் தொகுதிக்கு அடிக் கல் நாட்டும் நிகழ்வு இன்று காலை ஒன்பது முப்பது மணிக்கு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற வளாகத்தில் நடை பெற்றுள்ளது.
அதன் பின்னர் மேடை நிகழ்வுகளில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் உரையாற்றிக்கொண்டிருந்த போது மேடையில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசிரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரல பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன், நீதிபதிகள் கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதிபொலிஸ் மா அதிபர், ஆகியோர் கலந்து சிறப்பித்துக்கொண்டிருந்த வேளை,
மேடைக்கு நேர் எதிராக ஏ9 பிராதான வீதியின் ஓரமாக காணப்பட்ட பூவரசு மரத்தில் இருந்து முதியவர் கையில் ஒரு பதாகையை ஏந்தியவாறு உரத்த குரலில் சத்தமிட்டுப் போராடியுள்ளாாா்.
உடனடியாக பொலிஸார் மற்றும் சடடத்தரணிகள் ஆகியோர் சம்பவ இடத் திற்குச் சென்று முதியவருடன் பேசி அவரை மரத்தில் இறக்கிய போது அவர் கையில் வைத்திருந்த பதாகையில் வேண்டாம் எனும் தலைப்பில் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுவது உங்களுக்கு சேவை செய்வதற்கே,
உங்ளின் வரிப்பணத்தில் சம்பளம் பெறும் அவர்களுக்கு நீங்கள் இலஞ்சம் கொடுக்கத் தேவையில்லை எனவும் இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக செயற்பட வேண்டியது உங்களின் பொறுப்பாகும் எனவும் எழுதப்பட்டிருந்தது.
இதனை கையில் வைத்திருந்த முதியவர் பொலிஸார் இலஞ்சம் வாங்குவ தாகவும், குறிப்பாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் உள்ள ஒருவரின் பெயரை குறிப்பிட்டு அவர் இலஞ்சம் பெறுவதாகவும் தன்னை அச்சுறுத்தி யதாகவும் தெரிவித்த இந்நிலையில் பொலிஸார் அவரை சமரசம் செய்து அங்கிருந்து அழைத்துச் சென்றுள்ளனா்.