Breaking News

சிறைவாசம் அனுபவித்த கைதி மருத்துவமனையிலிருந்து தப்பி ஓட்டம்.!

பதுளை அரசினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சிறைக்கைதி தப்பிச் சென்ற சம்பவம் பதுளை அரசினர் மருத்துவமனையில் நேற்று மாலை நடைபெற்றுள்ளது. 

பதுளை பிரதான சிறைச்சாலையில் ஆறு வருடங்களை சிறைவாசம் அனு பவித்து வந்த நீர்கொழும்பைச் சேர்ந்த 38 வயது நிரம்பிய சிறைக் கைதியே தப்பிச் சென்றுள்ளார்.

சிறைவாசம் அனுபவித்து வந்த இந் நபர் திடீர் நோய் வாய்ப்பட்டதையடுத்து பதுளை அரசினர் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இயற்கை கடனை மேற்கொள்ள வேண்டுமென்று கூறியதும் சிறைக்காவலரினால் மாட்டப்பட் டிருந்த கைவிலங்கு கழட்டப்பட்ட பின்னர் மலசல கூடத்தின் பின்புறமாகச் சென்று தப்பித்துள்ளாா். 

பல மணி நேரம் சிகிச்சை பெறும் இடத்திற்கு திரும்பாததால் சிறைக்காவலர் மலசல கூடத்திற்கு சென்று பார்த்தபோது பின் பக்க வழியில் கைதி தப்பிச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

தப்பிச் சென்று இக் கைதியைத் தேடி பதுளை சிறைக்காவலர்கள் பதுளைப் பொலிசாருடன் இணைந்து தேடுதல் முயற்சியில் ஈடுபட்டுள்ளனா்.