Breaking News

கண்ணிமைக்கும் நொடியில் மக்கள் மீது மோதிச் சென்ற தொடரூந்தினால் 60 பேர் பலி.!

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் தசாரா பண்டிகையையொட்டி, ராவணன் உருவபொம்மை எரிப்பதைப் பார்த்துக்கொண்டிருந்த மக்கள் மீது தொடரூந்து மோதிச் சென்றுள்ளது. 

இவ் விபத்தில் 60 பேர் வரை பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று தசாரா பண்டிகை நாடு முழுவ தும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுள்ளது. இதையொட்டி, அமிர்தசரஸில் உள்ள சவுரா பஜார் பகுதியில் ராவணன் உருவப்பொம்மை நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றுள்ளது.

அப்போது, ராவணன் உருவபொம்மை எரிக்கும் நிகழ்வு நடக்கும் இடத்துக்கு அருகே ரயில்வே தண்டாளம் செல்கிறது. இதனால், ராவணன் பொம்மை எரிப்பு நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காக ஏராளமான மக்கள் கூடியுள்ளனா்.

அப்போது, ரயில் தண்டவாளத்தை மறித்தும் ஏராளமான மக்கள் நின்றிருந் தனர். ராவணன் பொம்மை எரிக்கப்பட்டபோது, பட்டாசு வெடிக்கப்பட்டுள்ளது.

பட்டாசு வெடிக்கும் சத்தத்தில் தண்டவாளத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் வரும் சத் தமும், ரயிலையும் மக்கள் கவனிக்கவில்லை. அப்போது வேகமாக வந்த ரயில், தண்டவாளத்தில் நின்றிருந்த மக்கள் மீது கண்ணிமைக்கும் வேகத்தில் மோதிச் சென்றுள்ளது.

அப்போது தண்டவாளத்தில் நின்றிருந்த மக்கள் நாலாபுறமும் தூக்கி வீசப் பட்டு, உடல்கள் ஆங்காங்கே சிதறிக்கடந்தன. இவ் விபத்தில் கிடைத்த முதல் கட்ட தகவலின்படி 60-க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளதாக தெரிவிக் கப்பட்டுள்ளது.