மைத்திரி, மகிந்த இரகசிய சந்திப்பு.!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கும் இடையில் இரகசிய சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
முன்னாள் அமைச்சர் எஸ்பி திசநாயக்க வீட்டில் இச் சந்திப்பு நடை பெற்றதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னாள் பாது காப்புச் செயலாளர் கோத்தபாய ராஜ பக்சவும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவும் இச் சந்திப்பில் கலந்துள் ளனா்.
சமீபத்தைய கொலை சதி முயற்சிகள் உட்பட முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. இச் சந்திப்பின் போது கொலை சதி முயற்சி குறித்து ஜனாதிபதி அறிந்திராத பல விடயங்களை முன்னாள் ஜனாதிபதி அவரிற்கு தெரிவித்துள்ளார் எனவும் தகவல்கள் வெளி யாகியுள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கத்திலிருந்து விலகி பொது எதிரணியுடன் இணைந்து காபந்து அரசாங்கத்தை அமைப்பது குறித்து ஐக்கியமக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நிறைவேற்று குழு ஆராய்ந்து வருகின்ற தருணத்தில் இச் சந் திப்பு நடைபெற்றுள்ளன.
சமீபத்தைய கொலை சதி முயற்சிகள் உட்பட முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. இச் சந்திப்பின் போது கொலை சதி முயற்சி குறித்து ஜனாதிபதி அறிந்திராத பல விடயங்களை முன்னாள் ஜனாதிபதி அவரிற்கு தெரிவித்துள்ளார் எனவும் தகவல்கள் வெளி யாகியுள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கத்திலிருந்து விலகி பொது எதிரணியுடன் இணைந்து காபந்து அரசாங்கத்தை அமைப்பது குறித்து ஐக்கியமக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நிறைவேற்று குழு ஆராய்ந்து வருகின்ற தருணத்தில் இச் சந் திப்பு நடைபெற்றுள்ளன.