Breaking News

இளைஞர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்துவதை விரும்பவில்லை - சம்பந்தன்

இலங்கை வந்துள்ள பிரித்தானியாவின் ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியங்க ளுக்கான அமைச்சர் மார்க் பீல்ட்க்கும் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று கொழும்பில் நடைபெற்றுள்ளது. 

கடந்த அரசாங்கத்தோடு ஒப்பிடுகையில்  அர சாங்கத்தின் செயற்பாடுகளில் மாற்றம் உள்ள தாக தெரிவித்த இரா. சம்பந்தன் அது மாத்தி ரம் போதாது எனத் தெரிவித்துள்ளாா்.

மேலும் ஐ.நா.மனித உரிமை பேரவையின் தீர்மானங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த இரா சம்பந்தன் தீர்மானத்தினை நிறைவேற் றுவதற்கு அரசாங்கம் இரண்டு வருட கால அவகாசம் கோரியிருந்தமையை சுட்டிக்காட்டிய அதே வேளை,

தீர்மானத்தினை நடைமுறைப்படுத்துவதில் பாரிய தாமதம் நிலவுவதனையும் சுட்டிக்காட்டினார். மேலும் மிக விரைவாக தீர்வு காணப்படவேண்டிய படையி னர் வசமுள்ள மக்கள் காலாகாலமாக வாழ்ந்து வந்த மக்களின் காணி விடு விப்பு,

நீக்கப்படுமென பலமுறை அரசாங்கம் வாக்கு கொடுத்தும் இன்னமும் நடை முறையிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்தது வைக்கப்பட் டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலை, தாமதித்து நிறுவப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் திறமையாக செயற்பட எத்தனிக்கிறார் கள்,

இந்த விடயங்கள் தாமதங்களின்றி செயற்படுத்தப்பட்டிருக்க வேண்டியவை எனவும் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளாா்.

மேலும் உண்மையை கண்டறி வதற் கான ஆணைக்குழு இன்னமும் நிறு வப்படாமையும் கவனிக்கப்படவேண்டிய விடயம் என தெரிவித்த இரா சம்பந்தன் உண்மையை மறைத்து விட முடியாது எனவும் உண்மை நிலை நாட்டப்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு எனவும் தெரிவித்த அதே வேளை,

உண்மையை நிலைநாட்டி கண்டறிந்து நீதியாயி நிலைநாட்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழு நிறுவப்படவேண்டும் என வலியுறுத்தினார்.

புதிய அரசியல் யாப்பு உருவாக்க நடைமுறைகள் தொடர்பில் கருத்து தெரி வித்த அவர் தமிழ் மக்களின் நீண்டகால அதிகாரப்பகிர்வு கோரிக்கை யானது ஒரு அரசியல் யாப்பினூடாக தீர்வு காணப்பட வேண்டிய ஒன்றாகும் என் பதனை வலியுறுத்திய அதேவேளை இந்த விடயம் தொடர்பில் கடந்த 30 வருட காலமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளமை யையையும் எடுத்துக்காட்டியுள்ளாா்.

கடந்த காலங்களில் ஒவ்வொரு ஜனாதிபதியும் அரசாங்கங்களும் இது தொடர் பில் எடுத்து வந்துள்ள நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்திய இரா சம்பந்தன் புதிய அரசியல் யாப்பு உருவாக்கம் இனிமேலும் தாமதமின்றி முன் னெடுக்கப்படவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளாா்.

நாம் பிளவுபடாத பிரிக்கமுடியாத ஒருமித்த இலங்கை நாட்டிற்குள் தீர்வொன் றினை எதிர்பார்க்கிறோம், இந்த கோரிக்கைக்கு எமது மக்கள் தொடர்ச்சியாக தேர்தல்களிலே அங்கீகாரம் வழங்கியுள்ளார்கள் மக்களது இந்த ஜனநாயக தீர்ப்பு மதிப்பளிக்கப்படவேண்டிய ஒன்று என்பதனையும் சுட்டிக்காட்டினார்.

நாங்கள் இந்த நாட்டில் சம உரிமையுள்ள பிரஜைகளாக சுய கௌரவத்துடம் சுய மரியாதையுடனும் வாழ விரும்புகிறோம் மக்களுக்கு தமது நாளாந்த நட வடிக்கைகள் தொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதனையும் வலியுறுத்தியுள்ளாா்.

மேலும் எமது இளைஞர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்துவதனை நாம் விரும்ப வில்லை கடந்த கால யுத்தத்தின் நிமித்தம் அவர்கள் அநேக இழப்புகளை சந் தித்தது விட்டார்கள் என்பதனையும் தெரிவித்துள்ளாா்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் இங்கு கருத்து தெரிவிக்கையில், புதிய அர சியல் யாப்பு உருவாக்கம் தொடர்பில் அரச தலைவர்கள் மத்தியில் அரசியல் விருப்பு குறைவாக காணப்படுவதாக தெரிவித்த அதேவேளை அநேக விடயங் கள் தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டபோதிலும் இன்னும் ஒரு தயக்க நிலை அரச தலைவர்கள் மத்தியில் காணப்படுவதாக தெரிவித்துள்ளாா்.

கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தினை தவற விடமுடியாது என வலியுறுத்திய இரா சம்பந்தன் தவறவிடும் பட்சத்தில் ஆட்சியில் யார் இருந்தாலும் இந்த நாடு பின்னோக்கியே செல்லும் எனத் தெரிவித்துள்ளாா்.

ஆகவே எல்லா கட்சிகளும் ஒன்றிணைந்து நீண்டகால ஐந்தே பிரச்சினைக்கு சரியான தீர்வினை காண முன்வருவது அவசியம் எனவும் அவ்வாறு இது தீர்க் கப்படாவிடில் இந்த நாடு மீண்டும் ஒரு வன்முறையை நோக்கி நகரும் என வும் தெரிவித்துள்ளாா்.

ஐ.நா.மனித உரிமை பேரவையின் தீர்மானம் தொடர்பில் கருது தெரிவித்த இரா சம்பந்தன் அரசாங்கம் இணைந்து முன்மொழிந்த இந்த பிரேரணை தொட ர்பில் அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளுக்கு அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் எனவும்,

இந்த தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனவும் அர சாங்கம் தனது மக்களுக்கு நீதியை செய்வதிலிருந்து விலக முடியாது எனவும் தெரிவித்துள்ளாா்.

இத் தீர்மானமானது மாற்றமடையாமல் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை அரசாங்கம் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளாா்.

கடந்த காலங்களில் பிரித்தானியாவின் பங்களிப்பினை பாராட்டிய இரா சம்பந்தன புதிய அரசியல் யாப்பு உள்ளிட்ட விடயங்கள் சரியான முடிவினை அடையும் வரை மிக நெருக்கமான சர்வதேச பங்களிப்பு அவசியம் அளவும் அதனை தவிர்க்க முடியாதென வலியுறுத்தியுள்ளாா்.

சுமார் ஒரு மணித்தியாலம் நடைபெற்ற இச் சந்திப்பில் பாராளுமன்ற உறுப் பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் ஜேம்ஸ் டோரிஸ் மற்றும் தூதரக அதிகாரிகளும் கலந்துள்ளனா்.