Breaking News

யுத்த குற்றச்சாட்டு விசாரணைகளுக்கு சர்வதேச தலையீடு அவசியமில்லை - பிரதமர்.!

இலங்கை படையினருக்கு எதிரான யுத்த குற்றச்சாட்டுகள் குறித்து விசார ணைகளிற்கு சர்வதேச தலையீடு அவசியம் இல்லையென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஒக்ஸ்போர்ட் பல்கலைகழக மாண வர்கள் மத்தியில் உரையாற்றிய பின் னர் அவர்களின் கேள்விகளிற்கு பதி லளிக்கையில் பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய அரசாங் கம் 2015 இல் பதவியேற்ற பின்னர் ஜன நாயகத்தை மீள ஏற்படுத்தியுள்ளது நீதித்துறை உட்பட பொது ஸ்தாபனங்களின் மீதான நம்பிக்கையை ஏற்படுத் தியுள்ளது. நல்லிணக்கம் உட்பட யுத்தம் சம்பந்தமான விடயங்களிற்கு பெரு மளவிற்கு தீர்வை கண்டுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

படையினரிடமிருந்த பொதுமக்களின் நிலங்களை பொதுமக்களிடம் மீள கைய ளித்துள்ளோம் அதேவேளை இந்த விடயத்தில் தேசிய பாதுகாப்பிற்கும் முக்கி யத்துவம் அளித்துள்ளோம் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு உதவிகளை நாங்கள் வரவேற்கின்றோமெனத் தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க யுத்த குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையை இலங் கையின் நீதித்துறையே விசாரணை செய்வது சிறப்பு எனத் தெரிவித்துள்ளாா்.

எவரும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு நடவடிக்கைகளை பார்வை யிடலாம் எனவும் தெரிவித்துள்ள பிரதமர் ஜெனீவா தீர்மானத்திற்கு அமைய மனித உரிமை பேரவையின் அமர்வுகளிற்கு அறிக்கைகளை சமர்ப்பித்து வரு வதாகவும் தெரிவித்துள்ளார்.