Breaking News

இன்று அதிகாலை பல நாடுகள் அதிர்ந்தன! மக்கள் அச்சத்தில்!!

பப்புவா நியூகினியாவில் 7 ரிச்டர் அளவிலான பாரிய நிலநடுக்கமொன்று பதி வாகியுள்ளது, அந்த நாட்டு நேரப்படி இன்று அதிகாலை இந்த நில நடுக்கம் பதி வாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் ஏற்பட்ட பாதிப்புக் கள் இதுவரை கண்டறியப்பட வில்லை, இந்த நில நடுக்கத்தைய டுத்து மேலும் 6 மற்றும் 5 ரிச்டர் அள வுகளை அண்மித்த நில அதிர்வுகள் பதிவானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதற்கு முன்னர் பப்புவா நியூகினியில் கடந்த பெப்ரவரி மாதம் பதிவான 7.5 ரிச்டர் அளவான நில அதிர்வில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள் ளனா்.

இதேவேளை இந்தோனிஷியாவின் பாலி தீவுகளில் 6 ரிச்டர் அளவிலான நில அதிர்வொன்று இன்று பதிவாகியுள்ளது. இவ்வேளை மூவர் உயிரிழந்துள் ளதுடன் மேலும் சில கட்டடங்கள் ஜாவாவில் இடிந்து வீழ்ந்துள்ளதாக தெரி விக்கப்படுகின்றது.

இதேவேளை ரஷ்யாவிலும் 6.3 ரிச்டர் அளவிலான அதிர்வொன்று இன்று பதி வாகியுள்ளதாக அமெரிக்க புவி சரிதவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..