Breaking News

விண்ணில் பறக்க விடப்படவுள்ள இலங்கை இளைஞனின் ரொக்கட்!

இலங்கையில் மாணவன் ஒருவரினால் தயாரிக்கப்பட்டு வரும் ரொக்கட் விரைவில் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. கிஹான் ஹெட்டி ஆராச்சி என்ற மாணவனினால் தயாரிக்கப்பட்ட ரொக்கட்டிற்கு ஜனாதிபதி விசேட பார்வை யைத் திருப்பியுள்ளாா். 

குறித்த மாணவனின் அபார திறமைக்கு ஆதரவு வழங்க ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன முன்வந்துள்ளார். கம் பஹா பண்டாரநாயக்க வித்தியாலயத் தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கல ந்து கொண்ட ஜனாதிபதி மாணவனின் திறமையை பார்வையிட்டுள்ளாா்.

குறித்த பாடசாலைக்கு நேற்று விஜயம் செய்த ஜனாதிபதி, அங்கு நடைபெற்ற X-Ban கண்காட்சியை திறந்து வைத்தார். அத்தோடு, மாணவர்களின் திறமை களை உலகிற்கு கொண்டு செல்லும் இக் கண்காட்சியை பார்வையிட்ட ஜனா திபதி மாணவர்களின் திறமையை பாராட்டியுள்ளாா்.

மேலும், மாணவன் தயாரித்த ரொக்கட்டை விண்ணுக்கு செலுத்துவதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், அதற்கு தேவையான சகல வசதிகளையும் வழங்குமாறும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணித்துள்ளாா். 

இதனையடுத்து மாணவனின் தயாரிப்பில் உருவான ரொக்கட் விரைவில் விண்ணில் செலுத்தி பரீட்சார்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ள தோடு, இம்மாணவனின் தயாரிப்பானது இந்தியா உள்ளிட்ட அயல்நாடு களுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையுமென எதிர்பாா்க்கப்படுகின்றது.