Breaking News

இந்தியாவுக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை.!

இந்தியா சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தினால் நாங்கள் 10 சர்ஜிகல் ஸட்ரைக் நடத்துவோமென பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இது தொடர்பில் லண்டனில் பாகிஸ்தா னின் இராணுவத் தளபதி கமர் ஜாவித் பாஜ்வா மற்றும் செய்தித் தொடர்பாளர் லண்டனின் பிரபல வானொலி ஒன்று க்கு வழங்கிய செவ்வியிலேயே மேற் கண்டவாறு தெரிவித்துள்ளாா்.

 மேலும் தெரிவிக்கையில்....,

“பாகிஸ்தானின் வலிமையை எவரும் தவறாக மதிப்பிட வேண்டாம். இனி மேல் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்தியா தாக்குதல் நடத்தினால் நாங் கள் 10 முறை அந்நாட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்துவோம். 3.7 இலட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீனாவுடன் பொருளாதார நடவடிக்கைகளை பாகிஸ்தான் முன்னெடுத்துள்ளது.

இதனை பாதுகாக்கும் பொறுப்பு பாகிஸ்தான் இராணுவத்திடம் உள்ளது. இத் திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு விட்டால் பொருளாதார சக்தி மிக்க நாடாக பாகிஸ்தான் மாறும்.

எங்கள் நாட்டில் ஊடக சுதந்திரம் முழுமையாக கடைபிடிக்கப்படுகிறது என் றும் அச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு பாகிஸ் தான் எல்லைக்குள் புகுந்து இந்திய இராணுவம் அதிரடித் தாக்குதலை தொடுத் துள்ளது. 

இதில் பல தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா். நாடு முழுவதும் பர பரப்பை ஏற்படுத்திய இந் நடவடிக்கை துல்லிய் தாக்குதல் என பொருள்படும். அதாவது இங்கிலாத்தில் இது “சர்ஜிகல் ஸ்ட்ரைக் என குறிப்பிடப்பட்டுள்ளது.