Breaking News

போதநாயகியின் மரணத்தில் அவரது கணவர் மீது சந்தேகம் - தாயாா்.!

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் விரிவுரையா ளராக கடமையாற்றிய நிலையில் அண்மையில் திருகோணமலை சங்கமித்த கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்ட போதநாயகியின் வீட்டிற்கு வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் நேற்று சென்று ஆறுதல் தெரி வித்துள்ளாா்.

போதநாயகியின் தாய் மற்றும் தந்தை யுடன் கலந்துரையாடியதுடன் கேட்டறி ந்துகொண்டதுடன் போதநாயகியின் திருமண வாழ்வின் பின்னரான நிலை மைகள் தொடர்பிலும் தாயாரால் தெரி விக்கப்பட்ட கருத்துக்களை உள்வாங்கி யுள்ளாா்.

இந் நிலையில் விரிவுரையாளரான போதநாயகியின் மரணத்தில் அவரது கண வர் மீதே தமக்கு சந்தேகம் இருப்பதாகவும் இம்மாதம் 22 ஆம் திகதி திருகோண மலை நீதிமன்றத்தில் குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு உள்ளதாகவும் தெரிவித்துள்ளாா்.

இதேநேரம் தாயாரினால் தனது மகளின் இறப்பில் மகளின் கணவரின் மேல் சந்தேகம் இருப்பதாக தெரிவித்ததுடன் சட்டமா அதிபரின் மூலமாக விசார ணையினை தீவிரப்படுத்துமாறு கோரி தனது சார்பில் அமைச்சர் அனந்தி சசிதரனிடம் சட்டமா அதிபரிடம் கையளிப்பதற்காக கோரிக்கை மனுவினை யும் கையளித்துள்ளாா்.