போதநாயகியின் மரண விசாரணைகளை முன்னெடுக்குமாறு - பெற்றோா்.! (காணொளி)
கிழக்கு பல்கலைகழகத்தின் திருகோணமலை வளாக விரிவுரையாளரான போதநாயகியின் மரணம் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு அவரது பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர்.
இக் கோரிக்கையை வலியுறுத்தும் சட்டமா அதிபருக்கான கடிதத்தை, வட மாகாண மக ளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரனி டம் அவர்கள் கையளித்துள்ளனர். கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக விரிவுரையாளராக கடமையாற்றி வந்த செந்தூரன் போதநாயகி, சங்கமித்த கடற்கரையில் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி சடலமாக மீட்கப்பட்டுள்ளாா்.

போதநாயகி தற்கொலை செய்தாரா அல்லது கொலை செய்யப்பட்டார என்பது இதுவரை தெரியவராத போதிலும் அவரின் உயிரிழப்புக்கு கணவரான செந்தூரனே காரணம் என சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டுள் ளது.
இந் நிலையில், வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் போதநாயகியின் வீட்டிற்கு நேற்று நேரடியாகச் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளாா். இதன்போது போதநாயகியின் தாய் மற்றும் தந்தை யுடன் கலந்துரையாடிய அனந்தி சசிதரனிடம், போதநாயகியின் திருமண வாழ்வின் பின்னரான நிலைமைகள் தொடர்பில் தாயார் தெரிவித்துள்ளாா்.
விரிவுரையாளரான போதநாயகியின் மரணத்தில் அவரது கணவரான சு. செந்தூரன் மீதே தமக்கு சந்தேகம் இருப்பதாக போதனாயகியின் தாயார் சந் தேகித்துள்ளாா்.
இதன்போது சட்ட மா அதிபரின் மூலமாக விசாரணையை தீவிரப்படுத்துமாறு கோரி தனது சார்பில் சட்டமா அதிபரிடம் கையளிப்பதற்காக கோரிக்கை கடி தம் ஒன்றினையும் அமைச்சர் அனந்தி சசிதரனிடம் போதநாயகியின் பெற் றோர் கையளித்துள்ளனா்.
போதநாயகி சடலமாக மீட்கப்பட்ட சம்பவ விடயமாக விசாரணைகளை மேற் கொண்டு வரும் திருகோணமலை பொலிஸார் நீதிமன்றத்தில் வழக்கு தாக் கல் செய்துள்ளனர்.
இவ் வழக்கு எதிர்வரும் 22 ஆம் திகதி திருகோணமலை மாவட்ட நீதவான் நீதி மன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.