Breaking News

அரசியல் கைதிகளின் விடுதலை விடயமாக ஜனாதிபதி சம்பந்தனுக்கு வழங்கிய கருத்து.!

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக, எதிர்வரும் 17ஆம் திகதி தீர்க்க மான முடிவு ஒன்றை தெரிவிப்பதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்றைய தினம் எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலை வருமான இரா.சம்பந்தனிடம் உறுதியளித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் நேற்று ஜனாதி பதி மைத்திரிபால சிறிசேனவை, எதி ர்க் கட்சித் தலைவரும், தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகி யோர் சந்தித்து கலந்துரையாடியுள் ளனா்.

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக, சிறிலங்கா பிரதமர், நீதியமைச் சர், சட்டமா அதிபர் ஆகியோருடன் இதுவரை நடத்தப்பட்ட பேச்சுக்களில் எந்த முடிவும் எடுக்கப்படாமை குறித்து சுட்டிக்காட்டிய அவர்கள், இந்த விவகாரத் துக்கு அரசியல் ரீதியான தீர்மானம் ஒன்றை எடுக்க வலியுறுத்தியுள்ளனா்.

அரசியல் கைதிகள் 10 ஆண்டுகளை சிறையில் கழித்துள்ள நிலையில், அவர் களை விடுதலை செய்வதற்கான அரசியல் தீர்மானத்தை எடுக்க வேண்டும் என சிறிலங்கா அதிபரிடம் கோரினர்.

இதன்போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, எதிர்வரும் 17ஆம் திகதி நாடாளு மன்றத்தில் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் கூட்டம் முடிவுற்ற பின் இது குறித்து பேச்சு நடத்தி தீர்வு ஒன்றை எட்டலாம் என உறுதியளித்துள்ளார்.

இதையடுத்து, உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதி களை தொடர்பு கொண்டு, சிறிலங்கா அதிபரின் உறுதிமொழியை தெரிவித் துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், போராட்டத்தைக் கைவிடுமாறு பரிந்துரைத்துள்ளாா்.