Breaking News

வீடுகள் கட்டப்படாத காரணத்தை சபையில் தெறிக்க விட்டாா் - சுவாமிநாதன்.!

வீடுகள் இல்லாதவர்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுக்க எனது அமைச்சிற்கு போதுமான நிதி ஒதுக்கப்படுவதில்லையெனத் தெரிவித்த மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச் சர் டி.எம். சுவாமிநாதன், அரசாங்கம் எப்போது நிதி ஒதுக்குகின்றதோ அப்போது வீடுகளை புனரமைத்து வழங்குவேன் எனத் தெரிவித்துள்ளாா். 

எனது அமைச்சுக்கு நிதி ஒதுக்காது என் னால் வீடுகளை கட்டிக்கொடுக்க முடி யாது. எனது அமைச்சிக்கு போதிய அளவு நிதி ஒதுக்கப்பட்டால் என்னால் சகல மக் களுக்கும் வீடுகளை வழங்க முடியும். நான் பாகுபாடு இல்லாது சகல மக்களுக்கும் வீடு களை கட்டிக்கொடுப்பேன். வடக்கு- கிழ க்கை விடவும் அனுராதபுரம் மாவட்டத்திற்கு அதிக அளவிலான வீடுகளை வழங்கியுள்ளோமெனத் தெரிவித்துள்ளாா்.

பாராளுமன்றத்தில் இன்று வாய்மூல வினாக்கான விடை நேரத்தின் போது பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரகுமான், யுத்தத்தால் பாதிப்பே அனுராத புரம் மாவட்டத்தில் வீடுகள் இல்லாது கஷ்டப்படும் மக்களுக்கான வீடுகள் பெற்றுகொடுக்கும் நடவடிக்கை எடுக்கப்படாதா?

வடக்கு கிழக்குக்கு கொடுக்கும் சலுகைகளை அனுராதபுரம் மக்களுக்கும் பெற்றுக்கொடுக்க வேண்டும் என கேள்வி எழுப்பி அதற்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் சுவாமிநாதன் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.