Breaking News

வித்தியா கொலை வழக்கில் தலைமறைவான பொலிஸ் அதிகாரியை கைது செய்க. !!!

யாழ்ப்பாணம் - புங்குடுத்தீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் பிரதான சந்தேக நபர்கள் தப்பித்து செல்வதற்கு உதவி புரிந்ததாக கூறப்படும் பொலிஸ் அதிகாரி ஸ்ரீகஜனை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு யாழ்.கயிட்ஸ் மஜிஸ்திரேட் ஆணையிட்டுள்ளாா். 

வித்தியா கொலை வழக்கின் பிரதான சந்தேகநபரான சுவிஸ் குமார் உள்ளி ட்ட ஏனைய சந்தேக நபர்கள் தப்பித்து செல்வதற்கு ஸ்ரீகஜன் உதவி புரிந்துள் ளார் என குற்றப்புலனாய்வு பிரிவினர் மன்றிற்கு அறிக்கை வழங்கியிருந் தனா்.

இதைத் தொடர்ந்து ஸ்ரீகஜன் தலைமறைவானார் இந் நிலையிலேயே நேற்று வழக்கை விசாரித்த யாழ். புங்குடுத்தீவு மஜிஸ்திரேட் ஸ்ரீகஜனை கைது செய்து மன்றில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஜனவரி மாதம் 30ஆம் திகதி விசா ரணைக்கு உட்படுத்தப்படவுள்ளது.