Breaking News

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் குறித்து பழ நெடுமாறன் தகவல்!

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பாது காப்பாக இருப்பதாக  தமிழர் தேசிய முன்னணித் தலைவர் பழ. நெடுமாறன்  தெரிவித்துள்ளார்

ராமநாதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு பேசியபோதே பழ. நெடு மாறன் மேற்கண்டவாறு தெரிவித்துள் ளாா்.  தமிழீழ விடுதலைப்புலிகள் தலை வர் பிரபாகரன் உயிருடன் பாதுகாப்பாக உள்ளதாகவும், அவர் மீண்டும் தமிழின விடுதலைக்காக போராட வருவார் என வும் தெரிவித்த பழ.நெடுமாறன், தான் இதனை மீண்டும் மீண்டும் உறுதியாகக் கூறுவதாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கவிஞர் காசி ஆனந்தன், விடுதலைப் புலிகள் இயக்கம் இன்னமும் உயிர்ப்புடன் உள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.



- நன்றி ஐ.பி.சி இணையத்திற்கு -