Breaking News

தமிழரின் பதவி உயர்வினை தடுக்க வேண்டிய தேவையில்லை - பிரதமர்

தமிழர்களினோ அல்லது தமிழ் பேசுபவர்களினதோ பதவியுயர்வுகளைத் தடு க்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இல்லை அவ்வாறான பதவி உயர்வு கள் அதிகரிக்கப்படுவதையே விரும்புகின்றோமென பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்துள்ளாா். 

நிர்வாகசேவை தரம் மூன்றுக்கு நடத் தப்பட்ட போட்டிப் பரீட்சையின் முடி வுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் அந்த பரீட்சை இரத்துச் செய்யப்பட்ட விவ காரம் தொடர்பாக நேற்று பாராளுமன் றத்தில் பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தில் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ளஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பியுள்ளாா்.

இதற்கு பதிலளித்து பேசும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளாா். மேலும் நிர்வாகசேவை தரம் மூன்றுக்கு நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் போது வினாத்தாள் ஒன்று பரீட்சைக்கு முன்னர் வெளியானதாலேயே பெறு பேறுகள் இரத்துச் செய்யப்பட்டிருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரி வித்துள்ளது.

இரத்துச் செய்யப்பட்ட பரீட்சை 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் மீண்டும் நடத்தப்பட்டுள்ளது. இப் பரீட்சைக்கான பெறுபேறுகள் விரைவில் வெளியிடப் படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.