Breaking News

இலங்கையில் முகநூலை தடை செய்ய திட்டம்.!

இலங்கையின் எதிர்கால சந்ததியினருக்கு சமூக வலைத்தளங்களினால் ஏற் படவுள்ள அழுத்தங்கள் சாா்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளமையால், இலங்கையில் முகநூலை தடை செய்வதற்கு திட்டமிட்டுள்ளனா்.

இதன் காரணமாக முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை இலங்கை யில் தடை செய்ய தீர்மானிக்கப்பட்டு வருவதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சந்திரானி பண் டார தெரிவித்துள்ளார்.

சிறுவர் தினத்தை முன்னிட்டு அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளாா். மேலும், சீனா உட்பட பல நாடுகளில் இவ்வாறான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெ டுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளாா்.

இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் முகநூல் பாவனை இன்றியமையாத ஒன் றாக மாறியுள்ளது. பெருந்தொகை இளைஞர்,யுவதிகள் பேஸ்புக் பாவனைக்கு அடிமையாகி உள்ளனர்.

இவ்வாறான நிலையில் இலங்கையில் முகநூலை தடை செய்ய எடுக்கும் தீர் மானம் குறித்து பலர் அதிருப்தி அடைந்துள்ளனா்.