Breaking News

பயிற்சியில் ஈடுபட்டிருந்த இளைஞன் பஸ்ஸூடன் மோதி பரிதாப பலி.!

வவுனியாவில் இன்று காலை ஓமந்தைப் பகுதியில் நடைபெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்துள் ளனர்.

மேலும் தெரிய வருகையில்,

இன்று காலை ஓமந்தை இறம்பைக் குளம் பகுதியில் துவிச்சக்கர வண்டி யில் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டி ருந்த இளைஞர்களில் ஒருவர் பிர தான வீதியில் சென்று கொண்டிருந்த போது மாடு குறுக்காக வீதியின் நடுவே பாய்ந்துள்ளது.

இதன்போது குறித்த இளைஞன் பின்னாள் வந்த பஸ் ஒன்றுடன் மோதிய போது விபத்து நடைபெற்றுள்ளது இதில் குறித்த இளைஞன் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞர் யார் ? எங்கிருந்து வந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளார் ? என்பது குறித்த விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். தற்போது இளைஞனின் சடலம் வவுனியா பொது வைத்தியசாலையில் வைக் கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனா்.