Breaking News

தமிழ் மக்களின் இழப்புக்களிற்கு நீதி வேண்டும். மனித உரிமை குழுவிடம் - தர்மலிங்கம் சுரேஷ்.!

தமிழ் மக்களின் இனப்படு கொலைக்கான நீதிவேண்டி தமிழக சட்டசபை இந் திய பாராளுமன்றத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென தமிழ் தேசிய மக் கள் முன்னணி மட்டு இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தமிழக மனித உரிமை குழுவினரிடம் கோரிக்கை விடுத்துள்ளாா். 

தமிழ்நாடு சென்னை பல்கலைக் கழக த்தின் அரசியல் பொது நிர்வாகம் மற் றும் சர்வதேச விவகாரங்களுக்கான பீடத்தின் தலைவர் பேராசிரியர் மணி வண்ணன் தலைமையிலான உயர் மட்டக் குழுவினர்,

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் உறுப்பினர்களுக்கும், காணாமல் போன உறவுகள் மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குமான சந்திப்பு மட்டு. தமிழ் தேசிய மக்கள் முன்னணி காரியாலயத்தில் நடைபெற்றுள்ளது.

தர்மலிங்கம் சுரேஷ் தெரிவிக்கையில்

கடந்த 1983 ஆம் ஆண்டு ஜூலை கல வரத்தின் பின்னர் இன்று வரை மட் டக்களப்பு மாவட்டத்தில் 23 கிராமங் கள் அழிக்கப்பட்டுள்ளதுடன் கிராமத் திலே 100 தொடக்கம் 200 வரையா னோர் படுகொலை செய்யப்பட்டும் கடத்தப்பட்டும் காணாமல் போயு முள்ளனர்.

இவ்வாறு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கிராமங்களில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் இங்கு நடந்த படுகொலைகள் தொடர்பாக நீதி விசா ரணை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படவில்லை.

அதேவேளை அரசாங்கங்களுடன் காலம் காலமாக எமது தமிழ் தலைவர்கள் வருகின்றார்கள். அவர்களை அரசாங்கம் தன்வயப்படுத்தி இந்த இன அழிப்புக் களையும் அநியாயங்களையும் வெளிக் கொண்டுவர விடாமல் ஏதோ ஒரு சலுகைகளை செய்து தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனா்.

இது எமது மக்களுடைய ஒரு அவலமான நிலைப்பாடு ஆகும் அதிகமானோர் சிறையில் வாடுகின்றார்கள். காணாமல் போன அதிகமானவர்களின் உறவுகள் மக்கள் தத்தளிக்கின்றனர்.

குழந்தைகள் பிள்ளைகள் தமது அன்புக்குரிய உறவினர்களை தேடி அலைகின் றார்கள் இதனால் அவர்களின் பொருளாதார, கல்வி ரீதியில் பெரும் பாதிப் படைந்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் அரசின் நெருக்கடி ஒரு புறமிருக்க் சகோதர முஸ்லிம் மக்கள் சிங்கள மக்களுடன் சேர்ந்து ஊர்காவல் படை என்ற பேர்வையில் பல தமிழ் மக்கள் வாழுகின்ற எல்லைக் கிராமங்களில் படுகொலைகள் நிகழ்த் தப்பட்டன இவ்வாறு மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கின்றோம்.

இந் நிலையில் கிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசம் அழிவுக்குள்ளான ஆபத்தான நிலையில் உள்ளது. கிழக்கு மக்கள் வடக்குடன் சேர்ந்து வாழ விட்டால் கிழக்கு மக்களின் வாழ்வு என்பது 5 அல்லது 10 வருடத்தில் கேள்விக் குறியாகிவிடும்.

கிழக்கில் தமிழ் மக்களுடைய பூர்வீக நிலங்கள் நில அபகரிப்பு தமிழர்களு டைய பொருளாதார வளச் சுரண்டல்களை செய்யப்படுகின்றது. 70 வருடங்க ளாக தமிழ் மக்கள் துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம்.

இதனை தழிழகத்தில் இருந்து நேரடியாக பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள் எங்களுடைய தமிழ் மக்களுக்கு தொடர்ச்சியாக அரசாங்கத்தினால் நடைபெற் றுக் கொண்டிருக்கின்ற இனப்படுகொலையும் இனத்தை இருப்பை அழிக்கின்ற காலம் காலமாக செய்கின்ற ஒவ்வொரு நடவடிக்கையும் அவதானித்துள்ளீர் கள்.

அந்த வகையில் எங்களுடைய அவலங்களையும் இங்கு எங்கள் மக்களுக்கும் நடந்த அநீதிகளையும் கேட்பதற்காக முதல் மறையாக வந்திருப்பது என்பது வரலாற்று சிறப்பாகும். எனவே இங்கு நடந்த அநீதிகள் படுகொலைகளை தமிழக சட்ட சபைக்கு கொண்டு சென்று அதனை பாராளுமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.