Breaking News

இளையோர் ஒலிம்பிக்கில் இலங்கை தடம்பதித்தார் வசந்தி மாரிஸ்டெல்லா

இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் மெய்வல்லுனர் போட்டி களின் பெண்களுக்கான தடை தாண்டல் ஓட்டப் போட்டியில் பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா மூன்றாவது இடத்தைப் பெற்றதன் மூலம் இளையோர் ஒலிம் பிக்கில் இலங்கை, தடம்பதித்துள்ளாா்.

ஆர்ஜன்டீனாவின் புவனர்ஸ் அயர்ஸ் நகரில் நடைபெற்றுவரும் 3 ஆவது கோடைகால இளையோர் ஒலிம்பிக் போட்டி நடைபெறுவதுடன் 206 நாடு களைச் சேர்ந்த 4 ஆயிரம் வீர, வீராங் கனைகள் கலந்து கொள்ளவுள்ளனா்.

.இலங்கை சார்பில் 13 வீரர்கள் 7 வகை யான விளையாட்டுக்களில் பங்கேற் றுள்ளனர். இதில் நேற்று நடைபெற்ற பெண்களுக்காக 2 ஆயிரம் மீற்றர் தடை தாண்டல் ஓட்டப் போட்டியிலேயே பாரமி வசந்தி, 3 ஆவது இடத்தைப்பெற்று வெண்கலப் பதக்கத்தை தனதாக்கியுள்ளாா்.

இளையோர் ஒலிம்பிக் போட்டி வரலாற்றில் இலங்கை அணி பெற்றுக் கொண்ட முதலாவது பதக்கம் என்பதுடன், இலங்கையின் முன்னாள் குறுந் தூர ஓட்ட வீராங்கனையும், ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான சுசந்திகா ஜயசிங்கவுக்குப் பின்னர் சர்வதேச மட்டத்தில் பதக்கமொன்றை பெற்றுக் கொண்ட முதல் வீராங்கனையாகவும் பாரமி வசந்தி வரலாற்றில் இடம் பிடித் துள்ளார்.

சிலாபம் மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த 17 வயதுடைய பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா குளியாப்பிட்டிய மத்திய கல்லூரியில் கல்வி கற்கின்றாா்.

 பாரமி வசந்தி, கடந்த மாதம் கொழும்பில் நடைபெற்ற 88 ஆவது சேர். ஜோன் டார்பட் சிரேஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் 18 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான 2000 மீற்றர் தடை தாண்டல் போட்டியை 6 நிமிடங்கள் 37.9 செக்கன்களில் நிறைவு செய்து புதிய போட்டிச் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை தனதாக்கியுள்ளாா்.