Breaking News

மைத்திரி உறுதிமொழிகளை மீறிச் செயற்பட மாட்டார் - நம்பிக்கை நாடாளுமன்ற உறுப்பினர்!

சிறிலங்கா நாடாளுமன்றில் நேற்றைய தினம் இரண்டாவது தடவையாகவும் நிறைவேற்றப்பட்ட மஹிந்த ராஜபக்சவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரே ரணையையும் ஏற்றுக்கொள்ள முடியாதெனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, தான் நேற்று முன்தினம் குறிப்பிட்டது போல் முறை யான வாக்கெடுப்பொன்றை நடத்த வேண்டுமென மீண்டும் வலியுறுத்தி யுள்ளாா்.

அதேவேளை ரணில் விக்கிரமசிங் கவை மீண்டும் ஒருமுறை பிரதம ராக நியமிக்கப் போவதில்லை என் றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேன திட்ட வட்டமாக குறிப்பிட்டதாக மஹிந்த ராஜபக்சவின் கட்சியான சிறிலங்கா பொதுஜன முன்னணி யின் அங்கத்துவத்தைப் பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ் மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

எனினும் எதிர்வரும் 24 மணி நேரங்களுக்குள் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிப்பது தொடர் பான அறிவிப்பு ஜனாதிபதியிடம் இருந்து வருமென ஐக்கிய தேசியக் கட்சியி னர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற வன்முறை களை அடுத்து நேற்று இரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பு காலிமுகத்திடலுக்கு எதிரில் அமைந்துள்ள ஜனாதிபதி செயலகத்தில் வைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான தாமரை மொட்டுக் கட்சியென அழைக்கப்படும் பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இக் கலந்துரையாடலில் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்ச கலந்துகொண்டிருக்கவில்லை. எனினும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்த நிலை யில் அவர்கள் முன்னிலையில் உரையாற்றிய அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன,

நேற்று முன்தினம் ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகள் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினதும் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலில் இணக்கத்திற்கு வந்த எந்தவொரு விடயங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் நிறைவேற்றவில்லையெனக் கூறியதாக சந்திப்பை முடித்துக்கொண்டு திரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளாா். 

அது மாத்திரமன்றி மீண்டும் ஒருமுறை ரணில் விக்கிரமசிங்கவை பிரத மராக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்போவதில்லையென ஜனாதிபதி திட்ட வட்டமாக அறிவித்ததாகவும் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள் ளாா்.

எவ்வாறாயினும் அலரி மாளிகையில் நேற்று இரவு நடைபெற்ற ஊடகவியலா ளர் சந்திப்பில் கலந்துகொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா, ஜனாதிபதி முன்தினம் நடைபெற்ற சந்திப்பின் போது குறிப்பிட்டதுபோல

நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் ஐக்கிய தேசியக் கட்சி பெரும்பான் மையை நிரூபித்தபடியினால் வெகுவிரைவில் பிரதமர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஜனாதிபதி அழைப்பு விடுப்பார் என நம்பிக்கை வெளியிட்டுள்ளாா்.

‘ஜனநாயக சம்பிரதாயத்திற்கு அமைய, பிரித்தானிய வெஸ்மினிஸ்டர் நடை முறைகளுக்கு அமைய மஹிந்த ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும்.

இல்லாவிட்டால் அவரது நிலமை மோசமாகிவிடும். ஆனால் அரசியல் அதிகா ரத்தை கைவிட முடியாது உள்ளார். அது மாத்திரமன்றி தனது குடும்ப உறுப்பி னர்களுக்கு எதிரான மோசடி, படுகொலை குற்றச்சாட்டுக்களைவிசாரணை செய்வதை தடுப்பதானது வெட்கக் கேடானது என்பதனை மஹிந்த சிந்திப்பாரா என்று தெரியவில்லை.

இருந்த போதிலும் ஜனவரி 8 ஆம் திகதிக்குப் பின்னர் ஜனாதிபதி தேர்தலுக்கோ அல்லது பொதுத் தேர்தலுக்கோ செல்வதற்கு நாம் தயார். ஆனால் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டு முறையான ஆட்சியொன்றின் கீழ் தேர்தல் நடத்தினால் நாம் ஏற்றுக்கொள் வோம்.

இன்று வெள்ளிக்கிழமை (16) என்பதால் கடந்த காலங்களில் வெள்ளிக் கிழ மைகளில் தான் பரபரப்பான செய்திகள் வெளியாகின. இருந்த போதிலும் பிரதமர் பதவிப்பிரமாணம் குறித்து இன்னும் ஜனாதிபதியிடமிருந்து பதில் கிடைக்கவில்லை.

எனினும் அடுத்துவரும் 24 மணிநேரத்தில் ஜனாதிபதியிடமிருந்து சிறந்த பதி லொன்று வருமென எதிர்பார்க்கின்றோம். ஐக்கிய தேசிய முன்னணியானது ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பிரதமராவதையே எதிர்பார்க்கிறது.

எனவே பெரும்பான்மைகொண்ட எமக்கு அப்பதவியை ஜனாதிபதி வழங்கு வார் என நம்புகிறோம்” என்றார். 

இதேவேளை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, நம்பிக்கையில்லாப் பிரே ரணை நிறைவேற்றப்பட்டதை ஏற்றுக் கொள்ளப் போவதில்லையெனத் தெரி வித்ததாக கூறப்படும் தகவல்களில் உண்மை இருக்காதென ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ரவி கருணாநாயக்க  தெரிவித்துள்ளாா்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் ஐக்கிய தேசிய முன்னணியின் பங் காளிக் கட்சிகள் மற்றம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியவற்றின் பிரதி நிதிகளுக்கும் இடையில் நேற்றைய (15) தினம் இடம்பெற்றிருந்த கலந்துரை யாடலில் ரவி கருணாநாயக்கவும் கலந்து சிறப்பித்துள்ளாா்.

இச் சந்திப்பில் ஜனாதிபதி மைத்ரி தெரிவித்திருந்த உறுதிமொழிகளை அவர் மீறி செயற்பட மாட்டார் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி நம்பிக்கை வெளியிட்டுள்ளாா்.
- நன்றி ஐ.பி.சி. இணையத்திற்கு -