Breaking News

இலங்கைக்கு 90 தண்ணீர் பௌசர்களை அன்பளிப்பாக வழங்கியது சீனா.!

சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையே நீண்ட காலமாக இருந்துவரும் நட் புறவை மேலும் பலப்படுத்தும் நோக்கில் சீன உதவி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட 90 தண்ணீர் பௌசர்களை உத்தியோ கபூர்வமாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

கடந்த சில காலமாக நாட்டில் ஏற்பட் டிருந்த காலநிலை தாக்கங்களின் கார ணமாக அரசாங்கம் ஆரம்பித்த நிவா ரண நிகழ்ச்சித் திட்டத்திற்கு உதவும் வகையில் ஒரு பில்லியன் ரூபா வுக் கும் அதிக பெறுமதியுடைய இந்த தண்ணீர் பௌசர்களை அன்பளிப்பாக வழங்க முன் வந்துள்ளனா்.

தண்ணீர் பௌசர்களை அன்பளிப்பு செய்ததனை குறிக்கும் வகையில் அவற்றின் சாவிகள் மற்றும் ஆவணங்களை இலங்கைக்கான சீனத் தூதுவர் செங் சூ ஆன் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளாா்.

அவ் ஆவணங்களை அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளரிடம் ஜனாதிபதி அவர்கள் கையளிக்fகையில்  ஜனாதிபதியின் செயலாளர் உதய.ஆர் செனவிரத்ன மற்றும் சீன தூதரகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனா்.