Breaking News

களத்தில் இறங்கியது அமெரிக்கா; மைத்திரிக்கு எச்சரிக்கை.!

இலங்கையில் தொடரும் அரசியல் நெருக்கடியின் மத்தியில் அமெரிக்கா அவ சர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. பிரச்சினை தொடர்ந்தால் அதன் தாக் கத்தை மிக விரைவில் உணரவேண்டியேற்படுமென இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்ளிட்ஸ் எச்சரித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வி யிலேயே அவர் இந்த விடயத்தினை வலியுறுத்துயுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இல ங்கையின் அரசியல் நெருக்கடி நிலை மைகள் சுமூகமாகத் தீர்ப்பதற்கு ஜனா திபதி மைத்திரிபால சிறிசேன பொறுப் புடன் செயற்படவேண்டும்.

வெளிப்படைத் தன்மையுடனும் ஜனநாயக ரீதியிலும் இது அவசரமாக தீர்க்கப்படவேண்டும். அரசியல் நெருக்கடி என்பது இலங்கையின் உள்நாட்டு விவகாரம். அதில் நாங்கள் தலையிடவிரும்பவில்லை. ஆனால் இதுவே தொடர்ந்தால் பொருளாதார ரீதியில் பல பாதிப்புக்களை எதிர்கொள்ள வேண் டியேற்படும்.

அரச நிறுவனங்கள் மீது பாதிப்புக்கள் ஏற்படலாம். இந்த நிலையில் எதிர் காலத்தில் இலங்கை தனது நட்பு நாடுகளுடன் எவ்வாறான நம்பிக்கையைப் பேணப்போகின்றது என்பது கேள்விக்குறியாகியுள்ளது. ஆகவே அரசமைப் பின்படி சட்ட ரீதியான ஒரு அரசு அமைவதற்கு வழி சமைக்க வேண்டுமென வலியுறுத்த விரும்புகிறேன்.” எனத் தெரிவித்துள்ளாா்.