Breaking News

தயாசிறி தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளாா்.!

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் புதிய பொதுச்செயலாளரான பாராளுமன்ற உறுப் பினர் தயாசிறி ஜயசேகர இன்று (10) முற்பகல் தனது கடமைகளைப் பொறுப் பேற்றுள்ளாா்.

கொழும்பு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி யின் தலைமையகத்தில் மகா சங்கத் தினரின் பிரித் பாராயணத்துடன் இந் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டுள் ளது.

இன்று முற்பகல் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்திற்குச் சென்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவும் இந் நிகழ்வில் பங்கேற்றதுடன், புதிய பொதுச்செயலாளரருக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளாா்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, துமிந்த திசாநாயக்க, மஹிந்த சமரசிங்க, திலங்க சுமதிபால, லசந்த அழகியவன்ன, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி யின் முன்னாள் பொதுச்செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷமன் பியதாச ஆகியோர் உள்ளிட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட செயற்பாட்டா ளர்கள் பலரும் கலந்து சிறப்பித்துள்ளனா்.