Breaking News

சஹ்ரானுடன் முஸ்லிம் காங்கிரஸ் ஒப்பந்தம் செய்து கொண்டதா ?-

தற்கொலை குண்டுதாரி சஹ்ரானுடன் முஸ்லிம் காங்கிரஸ் ஒப்பந்தம் செய்து கொண்டதாக முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா பாராளுமன்ற தெரிவு குழுவில் தெரிவிக்கையில் தெரிவு குழுவின் உறுப்பினர்கள் எவரும் கேள்வியெழுப்பவில்லை.

ஆகவே இவ் விடயம் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெளிவுப்படுத்த வேண் டும் என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரி வித்துள்ளாா்.

பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளாா்.

பாராளுமன்ற தெரிவு குழுவின் செயற்பாடுகள் ஒருதலைபட்சமானது என்பது தெளிவாக தெரிந்து கொள்ள முடிகின்றது. தெரிவு குழுவில் சாட்சியமளிப்ப வர்களிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மையப்படுத்தியே கேள்வி கள் கேட்கப்படுகின்றன.

அரசாங்கத்திற்கு எதிராக குறிப்பிடப்படுகின்ற குற்றச்சாட்டுக்களுக்கு முக்கி யத்துவம் வழங்கி அவை விசாரணைகளுக்கு எடுத்துக் கொள்ளப்படுவ தில்லை. கடந்த பாராளுமன்ற தெரிவு குழுவில் சாட்சியமளித்த முன்னாள கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் பல விடயங்களை குறிப்பிட்டார்.

மிலேச்சத்தனமான குண்டு தாக்குதலை நடத்திய தற்கொலை குண்டுதாரிக ளில் முக்கிய சூத்திரதாரியான பயங்கரவாதி சாஹ்ரானுடன் முஸ்லிம் காங் கிரஸ் ஒப்பந்தம் செய்து கொண்டது என்றாா்.

ஆகவே பயங்கரவாதி சஹ்ரானுடன் முஸ்லிம் காங்கிரஸ் என்ன ஒப்பந்தம் செய்து கொண்டது என்பதை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டுமெனத் தெரிவித்துள்ளாா்.