Breaking News

யாழில் கொடூரம் ; சகோதரனின் பிள்ளைகளைக் கத்தியால் குத்திய பெரிய தந்தை.!

தனது சகோதரனின் இரு பிள்ளைகளில் ஆண் பிள்ளையை கத்தியால் குத்தி காயப்படுத்தியும் பெண் பிள்ளையை கழுத்தறுத்துக் கொலை செய்துள்ள பெரிய தந்தையொருவரின் கொடூரச் செயல் யாழில் பெரும் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது.

காணிப் பிணக்கு காரணமாக பெரிய தந்தையாரின் கத்தியால் கழுத்தறுக் கப்பட்ட இளம் பெண் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். அத்தோடு குறி த்த பெண்ணின் சகோதரர் வயிற்றில் கத்திக் குத்துக்கு இலக்காகிப் படுகாய மடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டுள்ளார்.

இக் கொடூரச் சம்பவத்தை அரங்கேற் றியவர் கோப்பாய் பொலிஸ் நிலை யத்தில் கத்தியுடன் சரணடைந்துள்ளாா்.

இச் சம்பவம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருபாலை கந்தேவேள் பாடசாலைக்கு முன்பாக இன்று முற்பகல் இடம்பெற்றது. “காணிப் பிணக்கு காரணமாக உறவினர்களான அயலவர்கள் இருவருக்கும் இடையே நீண்ட காலமாகப் பிணக்குக் காணப்பட்டது.

அதனைச் சாட்டாக வைத்து பெரிய தந்தையார் கத்தியுடன் சென்று கந்தே வேள் பாடசாலைக்கு முன்பாக வைத்து தனது சகோதரனின் மகனை வயிற் றில் குத்தியுள்ளார்.

 இதையடுத்து கத்தியால் குத்தியவர் துவிசக்கர வண்டியை எடுத்துக் கொண்டு கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்குப் புறப்பட்டுள்ளார். இந்நிலையில் வழி யில் தனது சகோதரனின் மகளைக் கண்டுள்ளார். அவரைக் கத்தியால் குத்த முற்பட்ட போது, அப் பெண் குறித்த நபரை வீதியில் தள்ளி வீழ்த்தி விட்டுத் தப்பி ஓடியுள்ளார்.

அப் பெண்ணை பெரிய தந்தையார் துரத்திச் சென்றபோது அப் பெண் தடுமாறி வீதியில் சரிந்து வீழ்ந்த போது அவரை கழுத்து அறுத்து பெரிய தந்தை கொலை செய்துள்ளார்” என்று பொலிஸார் தெரிவித்துள்ளனா்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள் ளனா்.