Breaking News

அதிரடிப்படையினரின் வாகனம் மோதி முதியவா் படுகாயம்.!

வவுனியா ரயில் நிலைய வீதியில் இன்று (18) காலை 11.30 மணியளவில் விசேட அதிரடிப்படையினரின் வாகனம் மோதி ஒருவர் படுகாயமடைந் துள்ளார்.

ரயில் நிலைய வீதியில் இலங்கை வங்கி அருகே தரித்து நின்ற விசேட அதிர டிப்படையினரின் வாகனம் வீதிக்கு ஏற முற்பட்ட சமயத்தில் வவுனியா நகரிலிருந்து குறித்த வீதி வழியாக பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக் கில் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலின் சாரதியான முதியவர் படுகாயமடைந்த நிலையில் முச்சக்கரவண்டி மூலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசா லைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளாா்.

சம்பவ இடத்திற்கு போக்குவரத்து பொலிஸார் சமூகமளிக்க முன்னர் விசேட அதிரடிப்படையினர் விபத்துக்குள்ளான அவர்களது வாகனத்தை எடுத்துக் கொண்டு அவ்விடத்தினை விட்டு அகன்றுள்ளனா்.