Breaking News

தேசத்துரோக வழக்கில் வைகோ குற்றவாளி என அதிரடித் தீர்ப்பு.!

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் வைகோ என்ற ழைக்கப்படும் வை. கோபாலசாமி தேச துரோக வழக்கில் குற்றவாளி என தீர்ப் பளிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு ஒரு வருட சிறைத் தண் டனையும் 10,000 ரூபா அபராதமும் விதித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்ற நீதிபதி இன்று உத்தரவிட் டுள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு எழும்பூரில் நடை பெற்ற நூல் வௌியீட்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய வைகோ, இலங்கை போரில் தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும், காங்கிரஸ் மற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிராகவும் கருத்து வௌியிட்டிருந்தார்.

இதன் காரணமாக இந்திய இறையாண்மைக்கு எதிராக வைகோ கருத்து வௌியிட்டதாக தெரிவித்து அவர் மீது தேச துரோக வழக்கு தொடரப்பட்டுள் ளது.