Breaking News

பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி பலி.!

ஹசலக பிரதேசத்தின் ஹெட்டிபொல, உல்பத்தகம குளத்தில் நீராடிக் கொண் டிருந்த பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக ஹசலக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாடசாலை மாணவர்கள் குழுவுடன் நீராடச் சென்ற போது குறித்த மாண வன் நீரில் மூழ்கியுள்ளதாகவும் குறி த்த மாணவனை மீட்டு ஹசலக வைத்தியசா லையில் அனுமதிக்கப் பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரம்10 இல் கல்வி கற்கும் மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இந் நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் ஹசலக பொலிஸார் மேலதிக விசா ரணைகளை முன்னெடுத்துள்ளனா்.