Breaking News

ஐ.தே.க.வின் நகர்­வுகள் விடயத்தில் மைத்­திரி – மஹிந்த தீர்­வு­காண வேண்டுமென- சு.க.

பரந்­து­பட்ட கூட்­ட­ணியை அமைக்­காது வேட்­பா­ளரை தெரிவு செய்­வ­தென்­பது சாத்­தி­ய­மற்ற விட­ய­மாகும்.

எனவே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் எதிர்க்­கட்சித் தலை வர் மஹிந்த ராஜ­பக்ஷ உள்­ளிட்ட தலைவர்கள் விரைவில் கலந்­து­ரை­யாடி தீர்­மா­னத்­திற்கு வர வேண்டும் என சுதந்­திரக் கட்சி தெரி­வித்­துள்­ளது.

இந்த விட­யத்தில் ஐக்­கிய தேசிய கட்­சியின் நகர்­வுகள் முக்­கி­ய­மா­ன­வை­யாகு் எனவும் அக்­கட்சி குறிப்­பிட்­டுள்­ளது. ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் தலை­மை­ய­கத்தில் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை நடை­பெற்ற ஊடக சந்­திப்­பி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­விக்­கப்­பட்டுள்ளது.

இதன் போது கட்­சியின் பொதுச் செய­லாளர் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தயா­சிறி ஜய­சே­கர கூறு­கையில், நிலை­யான கொள்­கை­யு­டைய அர­சாங்­கத்தை நோக்கி நகர வேண்டும். தனி நபர்கள் மற்றும் அர­சியல் கட்­சி­க­ளினால் நாட்டின் பிரச்­சி­னைகள் தீரப்­போ­வ­தில்லை.

எனவே நாட்­டிற்கு நிலை­யான கொள்கை ஒன்று அத்­தி­ய­வ­சி­ய­மா­கின்­றது. மாறாத கொள்­கையை நோக்­கிய அர­சியல் பய­ணத்தை நாட்டில் ஏற்­ப­டுத்தும் நோக்­குடன் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி செயற்­படும்.

இல்­லை­யென்றால் இன்னும் நூறு ஆண்­டுகள் ஆனாலும் நாடு பாதா­ளத்­தி­லேயே இருக்கும். கட்சி பேதங்­களை மறந்து நபர்­க­ளுக்கு முக்­கி­யத்தும் கொடுக்­காது அனை­வரும் ஒன்­றி­ணைந்து செயற்­பட முன்­வர வேண்டும் என்­பதே சுதந்­திர கட்­சியின் நிலைப்­பா­டாகும்.

மத்­திய செயற்­கு­ழு­விலும் நிலை­யான கொள்கை திட்டம் குறித்து பேசப்­பட உள்­ளது. அதற்­க­மை­வா­கவே எதிர்­கால செயற்­பா­டுகள் காணப்­படும். அதே போன்று எதிர்­கால தேர்­தல்­களை மையப்­ப­டுத்தி கூட்­ட­ணிகள் அமைக்­கப்­படும் பட்­சத்தில் இந்த கொள்கை திட்­டத்­துடன் இணக்­க­பாட்டை ஏற்­றுக்­கொள் வோம்.

 வலு­வான கூட்­ட­ணி­யொன்று அமைக்­காது ஜனா­தி­பதி வேட்­பாளர் குறித்து பேசு­வதில் பல­னில்லை. 1994 பொடி ஹப்­பு­வா­மியின் கட்­சி­யுடன் தான் முதற் தட­வை­யாக சுதந்­திர கட்சி கூட்­டணி அமைத்­தது.

அன்று முதல் இன்று வரை சுதந்­திர கட்சி பல கட்­சி­களை இணைத்து கூட்­ட­ணி­யா­கவே தேர்­தல்­களில் போட்­டி­யி­டு­கின்­றது. கூட்­டணி அமைக்க முன்னர் வேட்­பா­ளரை எந்­வொரு சந்­தர்ப்­பத்­திலும் தெரிவு செய்­யப்­படவில்லை.

எனவே ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் எதிர்க்­கட்சி தலைவர் மஹிந்த ராஜ­பக்ஷ உள்­ளிட்ட தினேஷ் குன­வர்­தண போன்ற கட்சி தலை­வர்­க­ளுடன் ஒன்­றி­ணைந்து கலந்­து­ரை­யாடி எவ்­வாறு வலு­வான கூட்­ட­ணியை உரு­வாக்­கு­வது என்­பதை தீர்­மா­னிக்க வேண்டும்.

அதன் பின்­னரே வேட்­பா­ளரை தெரிவு செய்ய வேண்டும். இதற்கு அப்பால் சென்று செயற்­பட முடி­யாது. எனவே தலை­வரை அறி­விக்க அவ­ச­ரப்­பட தேவை­யில்லை. ஒற்­று­மை­யுடன் முதலில் கூட்­ட­ணியை உரு­வாக்­குவோம்.

ஐக்கிய தேசிய கட்சி இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை மாறாக எதிர் வரும் 5 ஆம் திகதி கூட்டணியை அமைக்கப் போவதாக அறிவித்துள்ளது. இவ் வாறே செயற்பட வேண்டும். ஜனாதிபதி சம்மந்தப்பட்ட தரப்புகளுடன் விரைவில் பேச்சுவார்த்தையை முன்னெடுப்பார் என நம்புகின்றேன் என்றார்.