Breaking News

ஆர்ப்பாட்டத்தை கலைக்க கண்ணீர் புகை, நீர்த்தாரை பிரயோகம் !

கொழும்பு, லோட்டஸ் சுற்றுவட்டப் பகுதியில் வேலையற்ற பட்டதாரிகள் முன்னெடுத்துவரும் ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

கோட்டை புகையிர நிலையத்திற்கு முன்பதாக வேலையில்லா பட்டதாரி கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலை யில் பின்னர் எதிர்ப்பு ஊர்வலமாக ஜனாதிபதி செயலகத்திற்குச் செல்ல முற்பட்டுள்ளனா்.

இதன் போது லோட்டஸ் சந்தியில் ஆர்ப்பாட்டக்காரர்களை வழிமறித்த பொலி சார் அவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற் கொண் டுள்ளனர்.

வேலையற்ற பட்டதாரிகளின் ஆர்ப்பாட்டம் காரணமாக, கொழும்பு, காலி முகத்திடலின் லோட்டஸ் சுற்றுவட்டப் பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது டன், அப் பகுதியில் பலத்த வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக் கது.