Breaking News

கொழும்பில் படகு சேவைக்கான நடவடிக்கை.!

தலைநகர் கொழும்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் புறக்கோட்டையிலிருந்து கொம்பனிதெரு வரை படகு சேவையை ஆரம்பிக்க காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கை கடற்படையினரால் நிர்மா ணிக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட பயணி கள் படகில் நேற்று முதலாவது கண் காணிப்பு சுற்றுப்பயணத்தை நகர்ப்புற மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க மேற் கொண்டுள்ளாா்.

இந்த படகு சேவையை ஆரம்பிப்பதன் மூலம், புறக்கோட்டையிலிருந்து யூனி யன் பிளேஸ் வரை 15 நிமிடங்களிலும் குறைவான நேரத்தில் பயணிக்க முடியு மென்பதோடு,போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இதுவொரு ஒரு சிறந்த தீர் வாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும் சுற்றுலாப்பயணிகளுக்கும் சிறந்த அனுபவத்தை வழங்கும் வகையில் இந்த சேவையை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சம்பிக ரணவக தெரிவித்துள்ளார். படகு வேவைக்கான குளிரூட்டப்பட்ட பயணிகள் படகுகள் இலங்கை கடற்படையினரால் உருவாக்கப்பட்டுள்ளது.