Breaking News

வாகனத்தைத் திருடி 900 கிலோமீற்றர் ஓட்டிச் சென்ற சிறார்கள்.!

அவுஸ்திரேலியாவில் நான்கு சிறுவர்கள் செய்த காரியம் பரவலாக அனை வராலும் பேசப்பட்டு வருகிறது. அவுஸ்திரேலியாவை சேர்ந்த 10 – 14 வயது களை உடைய நான்கு சிறார்கள், வாகனம் ஒன்றை திருடி சுமார் 900 கிலோ மீற்றர்கள் வரையில் பயணித்துள்ளனர்.

மேலும், அவர்கள் பணம் மற்றும் மீன் வலை என்பவற்றையும் எடுத்துச் சென்றுள் ளனர்.

குறித்த நான்கு பேரும் வெவ்வேறு குடும் பங்களைச் சேர்ந்தவர்கள் என்பதுவும் குறிப் பிடத்தக்கது. அவர்களில் ஒருவர் தமது பெற்றோருக்கு தாம் வீட்டில் இருந்து வெளியேறுவதாக கடிதமும் எழுதி விட்டு சென்றுள்ளார்.

கடந்த வார ஆரம்பத்தில் குயின்ஸ்லாந்தில் தமது பயணத்தை ஆரம்பித்த அவர்கள், நியுசவுத் வேல்ஸில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாதுகாப்பாக மீட்கப் பட்டனர். இடையில் அவர் ஒரு இடத்தில் பெற்றோலையும் களவாடியமை தெரியவந்துள்ளது.

அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறு யுள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று தகவல் வழங்கியுள்ளது.