Breaking News

மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி, வைரஸ் தொற்று 1889 ஐ எட்டியுள்ளது.

இலங்கையில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


இலங்கை கடற்படையை சேர்ந்த இருவரே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.

அதன்படி, நாட்டில் இதுவரை 1889 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதுவரை 1287 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுவரை 85,967 பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு  தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.