Breaking News

எம்.எஸ்.டோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் டோனியாக நடித்த நடிகர் சுசாந்த் சிங் தற்கொலை–அதிர்ச்சியில் பாலிவுட்

பாலிவுட் நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள அவருடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.   

“Kai Po Che” என்ற படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானவர் சுசாந்த் சிங் ராஜ்புத். இதையடுத்து இந்திய முன்னாள் கேப்டன் தோனியின் சுயசரிதையில் தோனியாக நடித்து இந்தியா முழுவதும் பிரபலமானார். இவருக்கு வயது 34. 

மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள தன்னுடைய வீட்டில்  ஊரடங்கு காலத்தில் அவர்  தனியாக வசித்து வந்துள்ளார். இந்த சூழ்நிலையில் அவர் வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. 

சுசாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை செய்தி கேட்டு போலீசார் அவரது வீட்டிற்கு விரைந்தனர். வீட்டில் தூக்கில் தொங்கி அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

நடிகரின் தற்கொலைக்கான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை. சில நாட்களாக அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறப்படுகிறது. மேலும் அவர் கடந்த சில மாதங்களாகவே மன அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார் என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பிறகே முழு விவரமும் தெரிய வரும்.

சுசாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை செய்தி கேட்டு பாலிவுட் நட்சத்திரங்கள், அவருடைய ரசிகர்கள் அனைவரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். #SushantSinghRajput என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி அனைவரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.