Breaking News

பணம் கேட்டு கையேந்தும் விக்கிக்கு தேர்தலில் மக்கள் பதிலடி வழங்குவார்கள் - சுமத்திரன்


முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நாடாளுமன்றத் தேர்தலுக்காக தமிழ் மக்களிடம் பணம் கேட்டுள்ளார். இதற்க்கு தமிழ் மக்கள், தேர்தலின்போது தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.

இவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட வேட்பாளருமான சுமத்திரன் அம்பாறையில் தெரிவித்துள்ளார்.

அம்மபாறை மாவட்டம், அக்கரைப்பற்று, ஆலடிவேம்பு பகுதியில் தமிழ் தேசியக் கூடமைப்பின் விசேட ஊடகவியாளர் சந்திப்பு இன்று பிற்பகல் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது தமிழ் மக்களின் அடிப்படை அபிலாசைகள் முழுமையாக உள்ளடக்கப்பட்ட புதிய புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் பட்டசத்தில் அதனை நிறைவேற்றுவதற்கு தமிழ் தேசிக் கூடமைப்பின் ஆதரவு வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.