Breaking News

ஊரடங்குச் சட்டம் தொடர்பாக வௌியான செய்தி!

கம்பஹா மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும், இன்றைய தினம் குறித்த 18 காவல்துறை பிரிவுகளிலும் உள்ள சதோச பல்பொருள் அங்காடிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் அனைத்தும் திறக்கப்பட உள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது. 

கடந்த திங்கட்கிழமை முதல் கம்பஹா மாவட்டத்தில் 18 காவல்துறை பிரிவுகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், சுகாதார பரிந்துரைகளுக்கு அமைவாக காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையில், சதோச, பல்பொருள் அங்காடிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட உள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.