Breaking News

மாதுளம் பூவிலுள்ள மருத்துவ குணங்கள்!

 நமது உடலில் உள்ள இரத்தம் அசுத்தமானால்

பலவகையான நோய்கள் ஏற்படுகிறது. மாதுளம்

பூ இரத்தத்தைச் சுத்தப்படுத்தி இரத்தத்தில் உள்ள

வெள்ளை அணுக்கள் மற்றும் சிவப்பணுக்கள்

எண்ணிக்கையை கூட்டி, ஹீமோ குளோபின்

அளவை சீர் செய்ய சிறந்த மருந்தாக

காணப்படுகிறது.


1. மாதுளம் பூவை நிழலில் உலர்த்தி அதனை

பொடியாக்கி கஷாயம் செய்து தினமும் காலை,

மாலை 2 வேளையும் அருந்தி வந்தால் இரத்தம்

சுத்தமடையும் உடலும் புத்துணர்வு பெறும்.

அல்லது காலையில் நான்கு மாதுளம் பூவை

சாப்பிட்டு சிறிது பால் குடிக்க வேண்டும்.

தொடர்ந்து 45 நாட்கள் உட்கொண்டுவர ரத்த

சுத்தி அடையும்.


2. உடல் நன்கு பலப்பட மாதுளம் பூவை நிழலில்

உலர்த்தி தூளாக்கி அதனுடன் தேன் கலந்து

சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடைந்து நல்ல

ஆரோக்கியம் கிடைக்கும்.


3. பெண்கள் மாதுளம் பூவை கஷாயம் செய்து

காலை வேளையில் அருந்திவந்தால் கருப்பை

வலுவடையும்.


4. அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வாயு

தொல்லை உடையவர்கள் மாதுளம் பூவை

கஷாயம் செய்து அருந்துவது நல்லது.


5. ஆண்களுக்கு மாதுளை பூவை காயவைத்து

பொடி செய்து அதனுடன் அருகம்புல் பொடி

கலந்து தேனில் குழைத்து ஒரு மண்டலம்

அருந்தி வந்தால் தாது விருத்தியடையும்.


6. மாதவிலக்கு நிற்கும் காலமான மெனோபாஸ்

காலத்தில் பெண்களுக்கு கை, கால், இடுப்பு

மூட்டுக்களில் வலி உண்டாகும். இவர்கள்

மாதுளம் பூவை நிழலில் காயவைத்து பொடியாக்கி

கஷாயம் செய்து இருவேளை அருந்தி வந்தால்

இப்பிரச்சனைகள் நீங்கும். அதுபோல வெள்ளைபடுதல்

குணமாகும்.