Breaking News

கருணா புலிகள் பிளவு – நடந்தது என்ன? -பாகம்-14 (காணொளி)

மட்டக்களப்பில் வாழ்ந்துவந்த
யாழ்பாணத்தைச் சேர்ந்தவர்களை உடனடியாகவே மட்டக்களப்பை விட்டு வெளியேறவேண்டும் என்று கருணா தரப்பினர் உத்தரவு பிறப்பித்தார்கள்.

தமது உடமைகள் அனைத்தையும் கைவிட்டுவிட்டு, வெறும் 500 ரூபாய் பணத்தை மாத்திரம் எடுத்துக்கொண்டு வட பகுதி வர்தகர்கள் வெளியேறவேண்டும். 24 மணிநேரத்திற்குள் அப்படி வெளியேறத்தவறுபவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும் என்று கருணா தரப்பினர் கடுமையாக எச்சரித்தும் இருந்தார்கள்.
வடபகுதியைச் சேர்ந்த சுமார் 5000 பேர் வரையில் அன்றைய தினமே கிழக்கைவிட்டு வெளியேறிய அவலநிலை கிழக்கில் உருவானது.

யாழ் வர்தகர்கள் மட்டக்களப்பை விட்டு வெளியேற்றப்பட்டதால் தமக்கு ஏற்பட்ட பிரதிகூலத்தை, தமக்கு ஒரு அனுகூலமாக மாற்றுவது எப்படி என்று வகை தேடினார்கள் விடுதலைப் புலிகள்.
யாழ் வர்த்தகர்கள் கருணா தரப்பினால் வெளியேற்றப்பட்தை தமக்குச் சாதகமாக்கிக்கொள்ளும் நகர்வுகளை மெது மெதுவாக மேற்கொள்ள ஆரம்பித்தார்கள் விடுதலைப் புலிகள்.
அந்த நடவடிக்கையில் அவர்கள் வெற்றியும் கண்டிருந்தார்கள்.


அந்த வரலாற்றின் பக்கங்களைத்தான் உண்மைகள் என்ற இந்த நிகழ்சியில் சற்று ஆழமாக நாம் பார்க்க இருக்கின்றோம்.

முன்னைய பதிவுகள்