Breaking News

கவனத்துடன் மஹிந்த களமிறங்க வேண்டும்! மக்கள் அவர் பக்கம்: பஷில் கூறுகிறார்

நாட்டின் நிலை­மை­களை ஆராய்ந்து மிகவும் கவ­னத்­து­டனே மஹிந்த தேர்­தலில் கள­மி­றங்க வேண்டும். யாரு­டைய தனிப்­பட்ட நோக்­கங்­க­ளுக்­கா­கவும் மஹிந்த தேர்­தலில் கள­மி­றங்­கினால் அது அவ­ரையே பாதிக்கும் என முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ குறிப்­பிட்டார். யார் என்ன சொன்­னாலும் மக்கள் இன்றும் மஹிந்­தவின் பக்­கமே உள்­ளனர் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் மஹிந்த ராஜபக்ஷ பிர­தமர் வேட்­பா­ள­ராக கள­மி­றக்கப் பட­வேண்டும் என்ற கருத்து மஹிந்த ஆத­ரவுக் கூட்­ட­ணியால் முன்­வைக்­கப்­பட்டு வரும் நிலை­மையில் அவர் கள­மி­றங்கும் சாத்­தியம் உள்­ளதா? என்­பது தொடர்பில் வின­விய போதே முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறி­ய­தாவது,

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­தவை மீண்டும் அர­சி­ய­லுக்கு கொண்­டு­வரும் முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வதை நான் அறிவேன். மக்­களும் அவரை மீண்டும் அர­சி­ய­லுக்கு அழைக்­கின்­றனர் என்­பதும் எமக்கு நன்­றா­கவே தெரியும். ஆனால் மஹிந்த மீண்டும் அர­சி­ய­லுக்கு வரு­வது தொடர்பில் என்னால் ஒரு நிலைப்­பாட்டில் கருத்து தெரி­விக்க முடி­யாது. மக்­க­ளுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்றால் அந்த வேலைத்­திட்­டத்தில் மஹிந்த எனக்கும் அழைப்பு விடுத்தால் நான் அந்த காரி­யத்தில் என்­னையும் இணைத்­துக்­கொள்வேன்.

ஆனால் என்­னைப்­பொ­றுத்த வரை­யிலும் மஹிந்த மிகவும் கவ­னத்­துடன் நிலை­மை­களை ஆராய்ந்து களத்தில் இறங்க வேண்டும். யாரு­டைய தனிப்­பட்ட நோக்­கமும் இதன் பின்­ன­ணியில் இருக்­கு­மானால் அது மஹிந்­த­வையே பாதிக்கும் என்­பதை அவர் மனதில் வைத்­துக்­கொள்ள வேண்டும்.

மக்கள் எப்­போதும் அவர் பக்கம் உள்­ளனர் என்­பதில் எந்த சந்­தே­கமும் இல்லை. அதே போல் தீர்­மா­னங்­களும் மக்­களை பலப்­ப­டுத்தும் வகையில் அமைய வேண்டும்.

இன்று நடை­மு­றையில் இருக்கும் அர­சாங்கம் மிகவும் நகைப்­புக்­கு­ரி­ய­தாக மாறி­யுள்­ளது. பெரும்­பான்மை ஆத­ரவு எதிர்க்­கட்சி பக்கம் இருக்­கையில் பெரும்­பான்மை ஆத­ரவு இல்­லாத அர­சாங்கம் ஆட்சி நடத்­து­கின்­றது. ஒரு சிலரின் தேவையை பூர்த்தி செய்யும் நோக்­கத்தில் முழு நாட்­டையும் பாதா­ளத்தில் தள்­ளி­யுள்­ளனர். உலகில் எந்த நாட்­டிலும் இவ்­வா­றா­ன­தொரு ஆட்சி நடக்­க­வில்லை. ஒரு ஆட்சி எவ்­வாறு அமையக் கூடாது என்­ப­தற்கு உலக நாடுகள் அனைத்­துக்கும் இலங்கை நல்­ல­தொரு உதா­ர­ண­மாகும்.

எமக்கு தோல்வி என்­பது புதி­தல்ல. ஆனால் இன்று நாட்டில் பல­மான எதிர்க்­கட்சி இல்­லாமல் போயுள்­ள­மையே எமக்கு மிகப்­பெ­ரிய தோல்­வி­யாக மாறி­யுள்­ளது. கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் 62 இலட்சம் மக்கள் அர­சாங்­கத்­துக்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்­துள்­ளனர் என்­பது ஏற்­றுக்­கொள்ளக் கூடிய விட­யமே. ஆனால் 58 இலட்சம் மக்கள் இந்த அர­சாங்­கத்தை எதிர்த்­துள்­ளனர். அந்த மக்கள் இன்று அனா­த­ர­வா­கி­விட்­டனர். அந்த மக்­களை இந்த அர­சாங்கம் பழி­வாங்கி வரு­கின்­றது.

யாரை ஆத­ரிக்க வேண்டும், யாருக்கு வாக்­க­ளிக்க வேண்டும் என்­பது மக்­களின் தனிப்­பட்ட விருப்­பாகும். ஜனா­தி­பதித் தேர்­தலில் 58 இலஞ்சம் மக்கள் மஹிந்­தவை ஆத­ரித்­தமை மக்­களின் தவறு அல்ல. அது மக்­களின் விருப்­ப­மாகும். ஆகவே அதை இந்த அர­சாங்கம் பழி­வாங்கும் நோக்­கத்தில் கையாளக் கூடாது. அவ்­வாறு செயற்­ப­டு­வது மீண்டும் இந்த நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் அமைந்து விடும். ஆட்சி மாறலாம் தலைமைத்துவம் கைமாறலாம். ஆனால் வென்றெடுத்த நாட்டின் விடுதலை மீண்டும் சிதைவடைந்துவிடக் கூடாது என்பதை ஒவ்வொரு ஆட்சியாளரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.