Breaking News

மீண்டும் சுமந்திரனின் பிரசார கூட்டம் பிசுபிசுத்துப்போனது

வடமராட்சியினை தொடர்ந்து
தென்மராட்சி உசன்; சிறீமுருகன் விளையாட்டுக் கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சுமந்திரனின் பெரும் எடுப்பிலான பிரச்சாரக்கூட்டம் பிசுபிசுத்துப்போயுள்ளது.

நேற்று மாலை 5.30மணிக்கு ஆரம்பிக்கப்பட இருந்த கூட்டத்திற்கு இரவு 8.30 மணிவரை மக்கள் எவரும் வரவில்லை.

வடமாகாணசபை உறுப்பினர் சயந்தனின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டதால் பெரும் சீற்றத்துடன் இசைக்கலைஞர்களை திட்டித் தீர்த்துள்ளார்.

பின்னர் 5.20 மணிக்கு கூட்டத்திடலுக்கு வந்த சுமந்திரன் காத்திருக்க 7 மணியளவில் அங்கு வந்த மாவையும் வெறிச்சோடிய மைதானத்தை பார்த்ததும் நின்ற இடம் தெரியாமல் சென்றுவிட்டாராம்.

இருந்தும் பெரும் பிரயத்தனத்தின் பின்னர் 8.50 மணியளவில் ஒரு 50 பேரை திரட்டி விட்டு பெருமெடுப்பிலான கூட்டம் சிறு குழு கூட்டமாக முடிந்தது. எனினும் சக வேட்பாளர்கள் எவரும் இன்றியே கூட்டம் நடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னைய பதிவுகள்

வடமராட்சியில் கூட்டமைப்புக்கு ஏற்பட்ட அதிர்ச்சி நடைபெற்றது என்ன? (புகைப்படங்கள்)