Breaking News

உள்­ளக விசா­ர­ணை­யொன்று தமிழ்­மக்கள் மீது திணிக்­கப்­ப­டு­மானால் அடுத்து என்ன செய்­வது?



தமிழ் சிவில் சமூக அமை­யத்தினால் வவு­னியாவில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலில் இடம்பெற்ற கருத்துரைகள்

ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ளரின் கலப்பு விசா­ரணை பொறி­மு­றைக்குப் பதி­லாக, இலங்கை அரசு விரும்­பு­கின்ற உள்­ளக விசா­ர­ணை­யொன்று தமிழ்­மக்கள் மீது திணிக்­கப்­ப­டு­மானால், அடுத்து என்ன செய்­வது என்று தமிழ் சிவில் சமூக அமை­யத்­தினால் ஒழுங்கு செய்­யப்­ப­ட்ட கலந்­து­ரை­யா­டலில் கேள்வி எழுப்­பப்­பட்­டி­ருக்­கின்­றது.

இந்தக் கலந்­து­ரை­யா­டலில் முக்­கிய பேச்­சா­ள­ராகக் கலந்து கொண்ட மனித உரி­மைகள் சட்­டத்­த­ரணி புவி­தரன், கலப்பு விசா­ரணை பொறி­முறை என்றால் என்ன என்­பது குறித்து நீண்ட விளக்­க­ம­ளித்தார்.

இந் நிகழ்வில் கலந்து கொண்­டி­ருந்த அருட்­தந்தை செல்­வ­ரட்னம் அடி­களார் உள்­ளக விசா­ர­ணையை ஏன் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்­ப­தற்கு நான்கு கார­ணங்­களை முன்­வைத்து அதற்­கான நியா­யத்தை வலி­யு­றுத்­தினார்.

இத­னை­ய­டுத்து, நிகழ்வில் கலந்து கொண்­டி­ருந்­த­வர்கள் பலரும் பல்­வேறு கருத்­துக்­களை முன்­வைத்து, கேள்­வி­க­ளையும் எழுப்­பி­யி­ருந்­தனர். அவர்­களின் கேள்­விகள் சந்­தே­கங்­க­ளுக்கு நிகழ்வின் பேச்­சா­ளர்­களும், நிகழ்ச்சி ஒழுங்­க­மைப்­பா­ள­ரு­ம் விளக்­க­ம­ளித்­தனர்.

இறு­தியில் கலந்­ரை­யா­டலில் இடம்­பெற்ற விட­யங்கள் குறித்து சிங்கம் தொகுத்து கருத்­து­ரை­யாற்­றினார். அவர் தெரி­வித்­த­தா­வது:

இது­வரை காலமும் இங்கு நடந்த மனித உரிமை மீறல் தொடர்­பான ஐ.நா. விசா­ர­ணை­க­ளுக்கு அர­சியல்­வா­திகள் அல்­லது தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பினர் பிழை செய்­கின்­றார்கள் என்ற பார்­வையில் முக்­கி­ய­மான ஒரு கருத்து இந்தக் கலந்­து­ரை­யா­டலில் முன் வைக்­கப்­ப­ட்­டி­ருந்­தது.

இந்தப் பிரச்­சி­னை­களில், தமிழ் மக்­களை சரி­யான முறையில் அறி­வூட்­ட­வில்­லை­யென்று ஊட­கங்கள், அர­ச சார்­பற்ற நிறு­வ­னங்கள் மற்றும் சிவில் அமைப்­புகள் என்­ப­வற்றின் மீது ஒரு­பக்கம் இங்கு குற்றம் சுமத்­தப்­பட்­டி­ருந்­தது.

சர்­வ­தேச விசா­ரணை, உள்­ளக விச­ரணை இரண்­டுமே சரி­வ­ராது என்றும், மறு தரப்பில், சர்­வ­தேச விசா­ர­ணைதான் சரி­வரும், அதில் நீதி கிடைக்க வேண்டும் என்று பல­த­ரப்­பட்ட கோணங்­க­ளி­லான ஆய்வு கருத்­துக்­களும் இங்கு முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன. இவை எல்­லா­வற்­றையும் மீறி, இலங்கை அர­சின் விருப்­பத்­திற்­க­மை­வாக, அமெ­ரிக்­காவும் ஐரோப்­பிய நாடு­களும் நாளை, உள்­ளக விசா­ர­ணையைத் திணித்தால், இந்த மக்கள் என்ன செய்­யப்­போ­கின்­றார்கள் என்­பது அடுத்த கேள்வி.

இந்த மக்­க­ளுக்கு உள்­ளக விசா­ரணையின் ஊடாக கிடைக்­கக்­கூ­டிய நீதி என்­ன­வாக இருக்­கலாம்? இது அர­சி­யல் ­பொ­றி­மு­றை­யி­னூ­டா­னதா? அல்­லது வெறு­மனே நீதி மற்றும் மனி­தா­பி­மானம் சார்ந்­ததா? என்ற பல­கேள்­விகள் இங்கே முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன.

இப்­ப­டி­யான பல­த­ரப்­பட்ட ஆரோக்­கி­ய­மான கருத்­துக்­களைக் கிண்­டிக்­கி­ளறி எமது மக்­க­ளி­டையே கலந்­து­ரை­யாட வைக்­க­வேண்டும் என்­பதே, எங்­க­ளு­டைய முத­லா­வது நோக்­க­மாக இருந்­தது. இத்­த­கைய இன்னும் பல விட­யங்­க­ளுக்கும் வினாக்­க­ளுக்கும் விடை­களைத் தேட­வேண்­டிய தேவை எழுந்­துள்­ளது.

சர்­வ­தேச விசா­ரணையை நாங்கள் ஏன் வர­வேற்­கின்றோம் அல்­லது ஏன் கோரி நிற்­கின்றோம் என்­ப­தற்கு உள்­ளக பொறி­முறையில் எங்­க­ளுக்கு நம்­பிக்­கை­யில்லை என்று வர­லாற்று வழி­யாக நாங்கள் புரிந்து கொண்­டி­ருக்­கின்றோம்.

இந்தக் கலந்­து­ரை­யா­டலில் இறு­தி­யாக இளைஞன் ஒருவன், 'இலங்­கையில் நடை­பெற்ற யுத்­தத்­திற்கு சர்­வ­தேச நாடு­களும் அர­சுக்கு உத­வி­யி­ருந்­தன. எனவே, இங்கு நடை­பெற்ற மனித உரிமை மீறல்­க­ளுக்கு சர்­வ­தேச நாடு­களும் பொறுப்பு கூற கட­மைப்­பட்­டி­ருக்­கின்­றன. குற்றம் புரிந்­த­வர்கள் விசா­ரணை செய்­வதில் நம்­பிக்கை இல்­லை­யென்றால், உள்­ளக விசா­ரணையும் ஒன்­று­தான்; சர்­வ­தேச விசா­ரணையும் ஒன்­றுதான். எனவே அதுவும் வேண்டாம்' என்று கூறினான். அந்தக் கூற்­றிலும் நியாயம் இல்­லா­ம­லில்லை.

இங்கே ஒரு கொடிய போர் நடந்­த­போது அனைத்து சர்­வ­தேச நாடு­களும் அதைப்­பார்த்­துக்­கொண்டு அங்­கீ­க­ரித்­துக்­கொண்­டுதான் இருந்­தன என்­பதைப் பலர் இங்கு சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தார்கள். இருந்­த­போ­திலும், எச்­ச­சொச்­ச­மாக இருக்­கின்ற ஜன­நா­யக அடை­யா­ளங்கள் சில­வே­ளை­களில் சர்­வ­தேச ரீதியில் நிறை­வேற்­றப்­ப­டுமா என்ற ஒரு நப்­பாசை இங்கு எழுந்து நிற்­கி­றது.

விசா­ர­ணை­களில், அதுவும் வேண்டாம் இதுவும் வேண்டாம் என்று நிரா­க­ரிப்­பது எங்­க­ளுக்கு இல­கு­வாக இருக்­கலாம். அது எப்­படி ஒரு தீர்­வுக்கு வழி­வ­குக்கும் என்­பதில் எங்­க­ளிடம் விடை இல்லை.

ஆனால், நாங்கள் ஏன் உள்­ளகப் பொறி­மு­றையை முற்­று­மு­ழு­தாக நிரா­க­ரிக்­கிறோம் என்­ப­தற்கு எங்­க­ளிடம் வலு­வான கார­ணங்கள் பல இருக்­கின்­றன. சர்­வ­தே­சத்தில் ஆயுதம் வழங்­கிய அல்­லது பல பொறி­மு­றை­களை வழங்­கிய நாடு­கள்தான் இன்று இந்த சர்­வ­ தேச விசா­ர­ணைக்குப் பின்னால் நின்று பாட்­டுப்­பாடு­கின்­றன என்­பதைத் தெரிந்­து­கொண்டும் எங்­க­ளுக்கு ஐ.நா. சபையில் நீதி கிடைப்­ப­தற்கு அப்பால், அப்­ப­டி­யான ஒரு விசா­ரணையின் ஊடாக ஐக்­கிய நாடுகள் சபையில் எங்­க­ளு­டைய வலி­க­ளையும் வேத­னை­க­ளையும் இழப்­புக்­க­ளையும் பதி­வு­செய்ய முடி­யுமா? என்ற கேள்வி இங்கு முக்­கி­யப்­படுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது.

எங்­க­ளு­டைய மக்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட அநீ­திகள் சர்­வ­தேச ரீதியில் பதி­யப்­ப­டலாம் என்­ப­தற்­காக இந்த நீதியை நாங்கள் கோரு­வ­தாக இருக்­கலாம். இது ஒன்­றுதான் எங்­க­ளுக்கு தற்­போது தெரி­கின்ற விட­ய­மாக இருக்­கின்­றது.

மிக முக்­கி­ய­மாக இங்கு ஒரு விடயம் தொடர்பில் கேள்­விகள் எழுப்­பப்­பட்­டி­ருந்­தன. உள்­ளக விசா­ர­ணைதான் வரு­கின்­றது அப்­பொ­ழுது நீங்கள் மக்­களை எப்­படி வழி நடத்தப் போகின்­றீர்கள்? மக்கள் போய் பேச வேண்­டுமா? அப்­ப­டிப்­பே­சினால் மக்­க­ளுக்கு நீதி கிடைக்­குமா? மக்­க­ளு­டைய வாழ்­வு­ரிமை உறு­திப்­ப­டுத்­தப்­ப­டுமா என்­றெல்லாம் வின­வப்­பட்­டி­ருந்­தன.

இது குறித்து, நாங்கள் எல்­லோரும் அவ­ச­ர­மாகக் கூடி பேச வேண்­டிய அவ­சி­யம இப்­போது எழுந்­துள்­ளது என்­பதே யதார்த்தம். இது இன்­றைய காலத்தின் கட்­டாய கடமை. பாதிப்­புக்­குள்­ளான மக்கள், அர­சியல் தலை­வர்கள், சமயத் தலை­வர்கள், தமிழ் மக்­க­ளி­டையே இருக்­கின்ற பலரும் இணைந்து பேச்­சுக்கள் நடத்தி, விவா­தித்து ஒரு தீர்க்­க­மான முடி­விற்கு வர­வேண்­டி­யுள்­ளது, அதனைச் செய்­வ­தற்கு தமிழ் சிவில் சமூக அமையம் தயா­ராக இருக்­கின்­றது. அதற்­கான நட­வ­டிக்­கை­களை அது மேற்­கொள்ளும். அதற்­காக அது மற்­ற­வர்­க­ளுடன் இணைந்தும் செயற்­படும். எனவே உள்­ளக விசாரணை என்ற ஒரு பொறி­முறை தமிழ் மக்­களின் தலையில் கட்­டப்­ப­டு­வ­தற்கு முன்­ன­தா­கவே நாம் எல்­லோரும் கூடி, பேசி, முடி­வெ­டுக்க வேண்­டி­யுள்­ளது.

இலங்­கையில் நடந்த உள்­ளக விசா­ர­ணைக்கு, நாங்கள் தமிழ் சிவில் சமூக அமையம் என்ற வகையில், இரண்டு கட்­டங்­களில் எங்­க­ளு­டைய பதிலை, வடக்­கு-­கி­ழக்கைச் சேர்ந்த எட்டு மாவட்­டங்­க­ளிலும் பாதிப்­புக்­குள்­ளான மக்­க­ளுடன் கலந்­து­ரை­யாடி அர­சாங்­கத்­திற்கு அளித்­தி­ருக்­கின்றோம்.

இதன் அடிப்­ப­டையில், இலங்­கையில் உரு­வாக்­கப்­பட்ட விசா­ரணை குழுக்­களில் நம்­பிக்­கை­யில்லை என்­பதை பாதிக்­கப்­பட்ட மக்­களே விசா­ர­ணை­யா­ளர்­க­ளி­டம்போய் நேர­டி­யாகத் தெளி­வு­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றார்கள். அர­சாங்­கத்தின் விசா­ர­ணைகள் பய­னற்­றவை என்­பதை அவர்கள் பதிவு செய்­தி­ருக்­கின்­றார்கள்.

அது மட்­டு­மல்ல, அதற்கும் அப்பால், அந்த விசா­ர­ணைக்­கு­ழுக்­க­ளிலே தங்­க­ளு­டைய சாட்­சி­யங்­களைப் பதிவு செய்ய விரும்­பி­ய­வர்­க­ளுக்­கான உரி­மை­யையும் நாங்கள் மறுக்­க­வில்லை. அத­னையும் நாங்கள் உறு­திப்­ப­டுத்­தி­யி­ருந்தோம். அவ்­வாறு அவர்கள் அதனைச் செய்­வதன் ஊடாக, அவர்­க­ளுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்­பிக்­கையில் அவர்கள் இருந்­தி­ருக்­க­வில்லை.

எனவே இன்­றைய சூழலில் ஐ.நா. விசா­ரணை தொடர்பில்; எதிர்­வரும் நாட்­களில் காத்­தி­ர­மான பல கலந்­து­ரை­யா­டல்­களை நடத்த வேண்­டிய தேவை எழுந்­துள்­ளது என்­பது இன்­றைய கலந்­து­ரை­யா­டலின் விளை­வாக இருக்­கின்­றது.

தமிழ் சிவில் சமூக அமை­ய­மா­னது, 2010 ஆம் ஆண்டு இயங்கத் தொடங்­கி­ய­தி­லி­ருந்து இன்­று­வரை தன்­னு­டைய இய­லு­மை­யின்பால் செயற்­பட்டு வரு­கின்­றது. அது காத்­தி­ர­மாக செயற்­பட இன்னும் இட­மி­ருக்­கின்­றது. தமிழ் சிவில் சமூக அமை­யத்­தி­ன­ரிடம் நிறைய பல­வீனம் இருக்­கின்­றது என்­ப­தையும் மறுப்­ப­தற்­கில்லை. எனவே, சிவில் சமூக அமை­யத்தைப் பலப்­ப­டுத்­து­வ­தற்கு அனை­வரும் முன்­வ­ர­வேண்டும்.

இன்­னு­மொரு விட­யத்­தையும் இங்கு குறிப்­பிட வேண்­டி­யுள்­ளது. கடந்த மூன்று ஆண்­டு­க­ளுக்கு முன்னர், தமிழர் தரப்­புக்கள் அனைத்­தையும் ஒன்­றி­ணைப்­ப­தற்­காக தமிழ் சிவில் சமூக அமை­யத்தின் அழைப்­பாளர் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பின் தலை­மையில் பல கட்டப் பேச்­சு­வார்த்­தை­களை தமிழ் அர­சியல் தலை­மை­க­ளுடன் நாங்கள் செய்தோம். ஆனால் அது வெற்­றி­பெ­ற­வில்லை. அதற்கு குறு­கிய அர­சியல் நோக்­கங்­களே காரணம் என்­பது எனது தனிப்­பட்ட கருத்­தாகும்.

ஐ.நா. அறிக்கை ஐ.நா. மனி­த­ உரிமை ஆணை­யா­ள­ரினால் வெளி­யி­டப்­பட்­டதும், இலங்கை அரச பேச்­சாளர் அதனை நிரா­க­ரித்த உடனே, தமிழ் சிவில் சமூக அமையம் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு உட்­பட தமிழ் மக்­க­ளு­டைய பிர­தி­நி­திகள் மற்றும் தமிழ் மக்கள் மத்­தியில் செல்வாக்கு செலுத்துகின்ற அனைத்துக் கட்சிகளுடனும் தொடர்புகொண்டு இதற்கு நாங்கள் ஒட்டுமொத்தமாக பதிலளிக்க வேண்டும் என்று ஒரு முயற்சியை மேற்கொண்டிருந்தோம். ஆனால் எல்லோ ருமே அதற்குச் சாதகமான பதிலைத் தர வில்லை. மாறாக, அவரவர்களுக்கான நியாய பிரதிவாதங்களுடன் அவர்கள் இருந்து கொண்டார்கள்.

எமக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி களுக்கும் மீறப்பட்டுள்ள மனித உரிமை களுக்கும் எதிராக நாங்கள் ஒன்றிணைந்து குரல் கொடுக்கத் தவறினால், குரல் கொடுக்காமல், அமைதியாக இருந்தால், நாங்கள் இந்த உள்ளக விசாரணையை ஏற்றுக்கொண்டவர்களாகிவிடுவோம். இதுவொரு ஆபத்தான அரசியல் சதி என்பதை அனைவரும் இன்றைய கால கட்டத்தில் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு குரல் கொடுக்கும் விடயத்தில், தமிழ் சிவில் சமூக அமையம் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் எதிரானதல்ல. இதனை சகலரும் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். இந்த அமையம் தமிழ் மக்களின் அபிலாசைகளை எடுத்தியம்புவதற்கும், அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு நீதி கோருவதற்குமான – மக்களின் குரலாக தொடர்ந்து ஒலிக்கும்.