Breaking News

வலி. வடக்கில் மக்களை மீள்குடியேற்றுவதற்கான திகதி அறிவிக்கப்படவில்லை

யாழ். வலிகாமம் வடக்கில் மீள்குடியேற அனுமதி கிடைத்துள்ள பகுதியில் மக்களை குடியமர செய்வதற்கான தினம் இதுவரை
அறிவிக்கப்படவில்லை என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் விரைவில் மக்களை மீள்குடியேற்றுவதற்கான தினம் அறிவிக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ். வலி வடக்கில் 60 குடும்பங்களை மீள்குடியமர்த்துவதற்கு மீள்குடியேற்ற அமைச்சிடமிருந்து அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வலி வடக்கில் காணப்படும் குடியேற்றதிட்டத்தில் வாழ்ந்தவர்க​ளை குடியமர்வதற்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பதியில் வறுத்தலைவிளான் தொடக்கம் சாந்த சந்தி வரையிலான வீதி விடுவிக்கப்பட்டுள்ள அதேவேளை, வலி வடக்கிற்கான மயானத்தினூடான பிரதான வீதியும் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் கூறியுள்ளார்.

இதேவேளை மேலும் ஒட்டகப்புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையும் விடுவிக்கப்பட்டுள்ளதோடு வலி வடக்கிலுள்ள 07 ஆலயங்களில் வழிபாடுகளை மேற்கொள்வதற்கும் அனுமதி கிடைத்துள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.