Breaking News

வித்தியா படுகொலைச் சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

புங்குடுதீவு வித்தியா படுகொலைச் சந்தேக நபர்கள் 10பேரையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின் குமார் உத்தரவிட்டார்.

இன்றைய தினம் புங்குடுதீவு வித்தியா படுகொலை வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டபோதே நீதவான் இவ்வாறு உத்தரவிட்டார்.

மேலும் புங்குடுதீவு மாணவியின் படுகொலை வழக்கின் சான்று பொருட்களின் ஆய்வு அறிக்கையானது இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதும், அந்த அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படவில்லை. 

இதேவேளை, இந்தக் கொலை வழக்குத் தொடர்பில் விசேட நீதிமன்றம் அமைக்கப்பட்டு விசாரணை செய்யப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கூறப்பட்டபோதும் இன்னமும் நடைபெறப்படுத்தப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.