Breaking News

மாகாணங்களுக்கு அதிகாரங்களை வழங்குக! புதிய அரசியலமைப்பில் கோரிக்கை

புதிய அரசியலமைப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் குழுவின் தலைமையிலான குழுவின் இடைக்கால அறிக்கையில் மாகாணசபைகள் உள்ளுரா ட்சிசபைகள் சம்பந்தமான பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன.


6 உபகுழுக்கள் அமைக்கப்பட்டு பாராளுமன்றுக்கு நேற்று அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.அந்நிலையில் மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிர்வது தொடர்பாக நியமிக்கப்பட்ட அதிகாரப்பரவலாக்கல் சம்பந்தமான குழுவின் அறிக்கையிலேயே இவ்வாறு வெளியாகியுள்ளது.

மாகாணசபை மற்றும் உள்ளுராட்சிக்கட்டமைப்புக்களை பலப்படுத்தி அதிகாரப்பரவலாக்கத்தை செய்ய வேண்டும் என்பதாக இவர்களது அறிக்கை அமைந்துள்ளது. 



முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்